அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்
Recommended Video
மதுரை: ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் சாதனையை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்தை ஆயிரம் அதிமுக தொண்டர்களுடன், அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று காலை மதுரை சிந்தாமணியில் இருந்து தொடங்கி வைத்தார்.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அதை நான் வழிமொழிகிறேன்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என்றார்.
நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி
இதனிடையே 10 சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் சாதனையை விளக்கம் தொடர்பான 5 நாட்கள் நடைபயணத்தின் போது அந்தந்த பகுதி மக்களிடம் குறைகள் கேட்டு மனுக்கள் பெற்று நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.