மதுரையில் 20 ஆண்டுகளுக்கு கிரானைட் குவாரி குத்தகை உரிமம் ஏலம்.. வெளியான முக்கிய அறிவிப்பு
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் 11 ஆண்டுகளுக்கு பின் கிரானைட் குவாரிகளை ஏலமிட முடிவு செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். இதற்கான ஏல அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் முறைப்படி வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில், விதிகளை மீறி கிரானைட் எடுத்ததாக புகார் எழுந்தது. மேலும் இப்படி விதிகளை மீறி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன்பின்னர் பிஆர்பி உள்ளிட்ட பல்வேறு கிரானைட் நிறுவனங்களின் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் தற்போதும் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் காரணமாக மதுரை மாவட்டததில் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012 செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில், விதிகளை மீறி கிரானைட் எடுத்தாக புகார் எழுந்தது. மேலும் இப்படி விதிகளை மீறி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகளை நடத்த மதுரை மாவட்ட நிர்வாகம் ஏல அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் 175 கல்குவாரிகள் உள்ளன. இதில் 70 குவாரிகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்நிலையில் மதுரை கிழக்கு, மேலுார் தாலுகாக்களில் உள்ள சில குவாரிகளை டெண்டர் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு குவாரி உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த அறிவிப்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளதாவது:" மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம், அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்திற்கான டெண்டர் விண்ணப்பங்கள் 30.10.2023 அன்று மாலை 04.00 மணி வரை தமிழக அரசின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரால் வரவேற்கப்படுகிறது.
31.10.2023 அன்று காலை 11.00 மணி முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டு டெண்டர் விண்ணப்பங்களை பிரித்து பரிசீலனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாதிரி விண்ணப்பப்படிவம், டெண்டர் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றின் விவரம் கடந்த அக்டோபர் 3-ம் தேதி வெளியான மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.04-ல் பிரசுரிக்கப்பட்டு உள்ளது.
பல வண்ண கிரானைட் குவாரி டெண்டருடன் இணைந்த பொது ஏலம் தொடர்பான விவரங்களுக்கு 'மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்', கூடுதல் கட்டிடம், 3-வது தளத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கிரானைட் குவாரிகளை ஏலம் எடுப்போர் விதிமுறை மீறி செயல்படுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்றும். குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் பாதிக்கும் அளவிற்கு நிலைமை சென்றுவிடக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications