பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமி கார் எரிப்பு.. மதுரையில் பரபரப்பு
Recommended Video

மதுரை: மதுரையில் பாஜக மகளிரணி செயலாளர் கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியில் வசிப்பவர் பாஜக மகளிரணி செயலாளர் மகாலட்சுமி. இவரது வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், மகாலட்சுமி மற்றும் குடும்பத்தாரும் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் காரின் பெரும்பான்மை பகுதிகள் எரிந்துவிட்டன.
கார் எரிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில், மது பாட்டில்கள், காலணிகள் கைப்பற்றப்பட்டன. அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் இதற்கு காரணம் என்று மகாலட்சுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications