நீங்க ஏறி அடிக்க நினைச்சா நாங்களும் ஏறி அடிக்க தயார் - அமைச்சர் வார்னிங்கால் கொந்தளித்த எச்.ராஜா!

Subscribe to Oneindia Tamil

மதுரை : திமுக ஏறி அடிக்க நினைத்தால் நாங்களும் ஏறி அடிக்கத் தயார் என அமைச்சர் சேகர் பாபுவுக்கு பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பதில் அளித்துள்ளார்.

சேகர் பாபு தனது அமைச்சர் பதவிக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்றும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலைத்துறையை பா.ஜ.கவினரும், மதுரை ஆதீனமும் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், பாஜக முன்னணி தலைவர் எச்.ராஜா சேகர் பாபுவை கடுமையாகச் சாடியுள்ளார்.

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்

சமீபகாலமாக மதுரை ஆதீனம் திமுக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொடர்பாக மதுரை ஆதீனம் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்தாலும், அதன்பிறகு தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவையும், இந்து சமய அறநிலையத் துறையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதனால், மதுரை ஆதீனத்திற்கும், தமிழக அரசு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

சேகர் பாபு எச்சரிக்கை

சேகர் பாபு எச்சரிக்கை

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ளக்கூடாது எனத் தெரிவித்தார். மேலும், மதுரை ஆதீன விவகாரத்தில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் பதுங்குவதை பயமாக கருதக்கூடாது. எங்களுக்கும் பாயத் தெரியும். மதுரை ஆதீனம் தனது அரசியல் பேச்சுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லயெனில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 பாஜகவினர் எதிர்ப்பு

பாஜகவினர் எதிர்ப்பு

அமைச்சர் சேகர் பாபுவின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உசிலம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, "தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக ஒரு மோசமான அரசு நடந்து கொண்டிருக்கிறது. தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச பிரச்சனையிலிருந்து இந்த அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளுக்கு எதிராக சில ரவுடிகளைப் போல நடந்து கொள்கின்றனர்.

மிரட்டும் பேச்சு

மிரட்டும் பேச்சு

அறநிலையத்துறை அமைச்சரின் பேச்சு ஆதீனத்தை மிரட்டும் வகையில் உள்ளது. தூக்கி அடிப்பேன், சும்மா இருக்கேன்னு நினைக்காதீங்க, பதுங்குவது பாய்வதற்கு தான் என அவர் பேசும் பேச்சு அவரின் லட்சணத்தை காட்டுகிறது. அவர் எந்த லட்சணத்தில் இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடந்தார். ஆனால் இப்போது மதுரை ஆதீனத்துக்கு எதிராக பேசுகிறார்.

 ஏறி அடிக்கத் தயார்

ஏறி அடிக்கத் தயார்

சேகர் பாபு அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அமைச்சர் சேகர் பாபு நாவடக்கத்தோடு பேச வேண்டும். அமைச்சர் சேகர் பாபுவின் வார்த்தைகள் தடித்தால், பா.ஜ.க களத்தில் இறங்கும். நீங்கள் ஏறி அடிக்க நினைத்தால் நாங்களும் ஏறி அடிக்கத் தயார்.

ஏரி இருக்கா?

ஏரி இருக்கா?

இவர்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 100 கோவில்களுக்கு மேல் இடித்துள்ளனர். கேட்டால் அந்தக் கோவில்கள் நீர்நிலைகளில் உள்ளதாக கூறுகின்றனர். வள்ளுவர் கோட்டம் எதில் உள்ளது? வடக்கு மாம்பலத்தில் லேக் வியூ ரோடு உள்ளது. அதில் லேக் இருக்கிறதா? இந்த திராவிட இயக்கம் என்பதே தமிழை, தமிழ் பண்பாட்டை, தமிழ் கலாச்சாரத்திற்கு ஆதரவாக உள்ள கோயில்களை அழிப்பதற்காக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+