எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரையில் டாக்டர்கள் சோதனை
சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு இன்று எச்ஐவி சோதனை நடைபெற்றது.
மதுரை: சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசியை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் செலுத்தியிருந்தார். இதற்கு பிறகு வெளிநாடு கிளம்புவதற்காக ஹெல்த் செக்கப் செய்ய மீண்டும் ஆஸ்பத்திரி சென்ற போதுதான் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று, தன் உடல்நிலை குறித்து சொன்னார்.
இது சம்பந்தமான விசாரணையும் நடத்தப்பட்டதில், இளைஞரின் எச்ஐவி பாதித்த ரத்தம், கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்டு விட்டது தெரியவந்தது. இந்த விஷயம் வெளியே தெரியவரவும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இவ்வளவு அலட்சியமாக ஒரு அரசு ஆஸ்பத்திரி இருக்குமா என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது.

இளைஞர் தற்கொலை
உடனே இது சம்பந்தமாக விசாரணையும் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றாலும், அலட்சியமாக செயல்பட்ட சிவகாசி அரசு ஆஸ்பத்திரி, டாக்டர்கள், நர்சுகள் என எல்லார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் சாத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று பரவ காரணமாக இருந்து விட்டோமே என்ற கவலை மற்றும் மன உளைச்சலில், பெண்ணுக்கு ரத்தம் தந்த இளைஞர், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலையே செய்து கொண்டார்.

45 நாட்கள்
பின்னர் கடந்த ஜனவரியில் எச்ஐவி பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கும் எச்ஐவி தொற்று பாதிப்பு இருக்குமா? என்பதை சோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்றும், 45 நாட்கள் ஆனால்தான் அந்த சோதனையை செய்ய முடியும் என்றும் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைக்கு எச்ஐவி தொற்று உள்ளதா? இல்லையா? என்று ரத்த பரிசோதனை நடைபெற்றது.

30 நாட்கள் ஆகும்
இதற்காக குழந்தையின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் தெரிய 30 நாட்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இதுபோல குழந்தைக்கு 6 மாதம், 12 மாதம், மற்றும் 18 மாதம் ஆகிய இடைவெளிகளில் மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

குழந்தை நலம்
அதனால் தாயும் குழந்தையும் அதுவரை தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்பார்கள் என தெரிகிறது. இப்போதைக்கு குழந்தை நன்றாக இருக்கிறது என டாக்டர்கள் சொல்லுகிறார்கள். பிறந்த போது 1.7 கிலோ எடை இருந்ததாம். இப்போது 2.8 கிலோ எடை இருக்கிறதாம்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications