மருது சேனை நிறுவனர் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி.. மதுரை அருகே பெரும் பரபரப்பு!
மதுரை : மதுரை அருகே மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர், மருது சேனை எனும் அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார் ஆதிநாராயணன்.

வரும் லோக்சபா தேர்தலில் மருது சேனை கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார் மருது சேனை நிறுவனர் ஆதிநாராயணன்.
இந்நிலையில், இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் உள்ள மருது சேனை அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆதிநாராயணன். =
அப்போது மைட்டான்பட்டிக்குள் நுழையும் பகுதியில் இவரது கார் சென்ற போது, எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதியுள்ளது. காரில் வந்த கும்பல், ஆதிநாராயணன் காரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசி உள்ளது. அந்த குண்டு அவரது காரின் மீது விழவில்லை.
ஆதிநாராயணன் காரை ஓட்டிய டிரைவர், உடனடியாக சாலை ஓரம் பள்ளத்தில் காரை இறக்கி, தப்பிக்க முயன்றார். ஆனாலும், அக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயன்றது. அப்போது காரின் முன் பகுதியில் குண்டு விழுந்து வெடித்தது. தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்த கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர். கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஆதிநாராயணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இந்த கொலை முயற்சி சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மருது சேனை அமைப்பினர் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கள்ளிக்குடி- விருதுநகர் நான்கு வழிச்சாலையில் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications