Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, பெரியவீதி பள்ளிவாசல் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு திடீரென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மோப்பநாய்கள் 3 இடங்களிலும் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான வீடாக உள்ளது. இந்த திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் தர்கா உள்ளது.

sikandar dargha bomb threat madurai

சமீபத்தில் திருப்பரங்குன்றம் என்பது முருகனின் மலையா? சிக்கந்தர் மலையா? என்ற கிளம்பியது. அதன்பிறகு இந்த சர்ச்சை அடங்கியது.

அதன்பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமி நாதன், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார்.

ஆனால் பிரச்சனைகள் வரும் என்பதால் போலீசார் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இப்படியான சூழலில் தான் இன்று திடீரென்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிற்பகல் 3 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

அதில் மதுரை கலெக்டர்அலுவலகம், மதுரை பெரியவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்கா உள்ளிட்டவற்றுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறையினர் 3 இடத்துக்கு விரைந்தனர். மோப்பநாயும் கொண்டு செல்லப்பட்டது. மதுரை கலெக்டர் அலுவலகம், சிக்கந்தர் தர்கா, பெரியவீதியில் உள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை அங்கு வெடிகுண்டு உள்பட எந்த மர்மபொருளும் சிக்கவில்லை. இதனால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+