Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன? மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாட்சியம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் இருவரும் கோவில்பட்டியில் தாக்கப்படவில்லை என்றும், இருவரும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தான் தாக்கப்பட்டனர் என்று ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். செல்போன் கடை நடத்தி வந்த இவர்கள் இருவரையும் கொரோனா ஊரடங்கின் போது அதாவது, கடந்த 2020 ஜுன் மாதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீசார் அடித்ததில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர்.

 Both the father and the son died in the Satankulam police station, Kovilpatti judges testimony

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் என 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் எஸ்எஸ்ஐ ரகுகணேஷ் உள்ளிட்டோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஜாமீன் கோரி மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மதுரை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தரப்பு வாதம் வைக்கப்பட்டது. இதில், தந்தை மகன் இருவரும் கோவில்பட்டியில் தான் தாக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. இந்த நிலையில், அந்த வாதத்தை மறுத்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சாட்சியம் அளித்தார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை தொடக்கத்தில் விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் இன்று சாட்சி அளித்தார். அவர், தந்தை, மகன் இருவரும் கோவில்பட்டியில் தாக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தான் தந்தை மகன் இருவரும் தாக்கப்பட்டனர் என்று சாட்சியம் அளித்தார்.

முன்னதாக, ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ, மற்றும் ஜெயராஜ் மனைவி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+