Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிலை கடத்தல் வழக்கு! பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்! சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜியான பொன் மாணிக்கவேல், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக சிலைக் கடத்தல் பிரிவில் ஓய்வு பெற்ற ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அண்மையில் அவர் வீட்டில் சிபிஐ ரெய்டும் நடத்தப்பட்டது.

pon manikavel madurai

இந்த நிலையில் சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார். அதில் டிஎஸ்பியான காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதற்கு மாறாக சிபிஐ எஸ்.பி. என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார் என்றும் இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான் அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும். எனவே பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவுபடியே பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் இடையூறு ஏற்படும் என கூறப்பட்டது. பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: என்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். அப்போது நீதிபதி கூறுகையில் பொன் மாணிக்கவேல் மீது ஜாமீன் வழங்கக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதா அல்லது ஜாமீன் வழங்க முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நாளை (இன்று ஆக. 30) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இன்றைய தினம் இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா இல்லை அவர் கைது செய்யப்படுகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை சிபிஐ அலுவலகத்தில் 4 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+