சிலை கடத்தல் வழக்கு! பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்! சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு
மதுரை: சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐஜியான பொன் மாணிக்கவேல், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
தமிழக சிலைக் கடத்தல் பிரிவில் ஓய்வு பெற்ற ஐஜியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அண்மையில் அவர் வீட்டில் சிபிஐ ரெய்டும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சிபிஐ வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார். அதில் டிஎஸ்பியான காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதற்கு மாறாக சிபிஐ எஸ்.பி. என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார் என்றும் இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொன் மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான் அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும். எனவே பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவுபடியே பொன் மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் இடையூறு ஏற்படும் என கூறப்பட்டது. பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: என்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். அப்போது நீதிபதி கூறுகையில் பொன் மாணிக்கவேல் மீது ஜாமீன் வழங்கக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளதா அல்லது ஜாமீன் வழங்க முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் தேவைப்படுகிறது இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நாளை (இன்று ஆக. 30) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்றைய தினம் இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா இல்லை அவர் கைது செய்யப்படுகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை சிபிஐ அலுவலகத்தில் 4 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications