Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிபியா பயணம் ஏன்? மதுரை விமான நிலையத்தில் இளைஞர் கைது- தீவிரவாதிகளுடன் தொடர்பா என விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை: துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த இளைஞரை மதுரை விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயண தடை விதிக்கப்பட்ட லிபியாவுக்கு பிரவீன் சென்றது ஏன் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Recommended Video

    மதுரை: லிபியாவிற்கு சென்று வந்த சென்னை இளைஞர்: தீவிரவாதிகளுடன் தொடர்பா? போலீஸ் விசாரணை!

    துபாயில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த பிரவின் என்ற சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு துபாய்க்கு வேலைக்கு பிரவின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.

     Chennai Youth arrested at Madurai Airport

    2019- ல் துபாயில் இருந்து லிபியா சென்றுள்ளார் பிரவீன். லிபியாவில் இருந்து தற்பொழுது துபாய் மூலமாக மதுரை வந்ததால் சந்தேகமடைந்த குடியேற்ற துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஏமன், ஓமன், துபாய், சவுதி அரேபியா, எகிப்து ,ஈரான் போன்ற நாடுகளை தவிர மற்ற அரபு நாடுகளுக்கு செல்ல பயண தடை விதிக்கப்பட்டது. ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதாக் அந்த நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தடையை மீறி பிரவீன் லிபியா சென்று வந்தது உறுதி செய்யப்பட்டதால் மதுரை பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+