தண்ணீர் இல்லம்மா அது.. அவசரத்தில் ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்.. கவனக்குறைவால் பறிபோன உயிர்!
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு, அவரது தாயார் அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து குடிக்க கொடுத்தார். இதனால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் நடந்த அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என சிறுமியின் தாயார் கதறி அழுதபடி குற்றம்சாட்டி உள்ளார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார்-தீபா தம்பதிக்கு அகல்யா என்ற 8 வயது மகள் உள்ளார். அகல்யாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீரக் செயல்பாடு குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தை அகல்யாவை அழைத்துக்கொண்டு சென்று புதுவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்கள்.
ஆனால் குழந்தைக்கு தீவிரமான உயர்சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இதையடுத்து மாதம் 30-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அகல்யாவை ஆனந்தகுமார்-தீபா தம்பதி அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருமுறை சிறுமி அகல்யாவிற்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் மீண்டும் டயாலிசிஸ் செய்துள்ளார்கள். அதன் பின்னர் சிறுமி அகல்யாவிற்கு ரத்த அழுத்தம் உயர்ந்து வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றம் அடைந்த அகல்யாவின் தாய் தீபா, அப்போது அகல்யாவின் படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து சிறுமியின் குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அது பாத்ரூம் உள்பட அறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட் என்று கூறப்படுகிறது. ஆனால் அதனை சிறுமி குடிக்கவில்லையாம். தண்ணீர் இல்லை என தெரிந்த சிறுமி அதனை உடனே துப்பி இருக்கிறாராம். இதை பார்த்த செவிலியர் அது ஸ்பிரிட் என்பதை கூறி எச்சரித்துள்ளார்.
ஆனாலும் சிறுமிக்கு திடீர் உடல் நிலை மோசமடைந்துள்ளது. உடனடியாக அகல்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி அகல்யா இன்று (வெள்ளிக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாக சிறுமியின் தாய் தீபா குற்றம்சாட்டி உள்ளார். டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்திருந்த காரணத்தால் தான் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், சிறுமி ஸ்பிரிட்டை முழுமையாக குடிக்காத போதிலும் சிகிச்சை பலன் இன்றி இறந்துபோனதாகவும் தாய் தீபா வேதனையுடன் கூறினார்.

இதையடுத்து குழந்தையின் இறப்பு குறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி கவனக்குறைவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications