10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. என்ன காரணம்? மதுரையில் அதிர்ச்சி..
மதுரை: மதுரையில் துப்பாக்கியால் சுட்டு 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சுடும் வீரரான இவர் ‛ஏர்கன்' துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருத்திகா. இவரது மகன் பெயர் யுவன்.

இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். துப்பாக்கி சுடும் வீரராக யுவன் இருந்தார். பல்வேறு போட்டிகளில் அவர் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் தான் இன்று அவர் திடீரென்று ‛ஏர்கன்' துப்பாக்கியை பயன்படுத்தி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மதுரை மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
யுவனின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யுவன் தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
யுவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததா? மனஅழுத்தத்தில் இருந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications