10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. என்ன காரணம்? மதுரையில் அதிர்ச்சி..
மதுரை: மதுரையில் துப்பாக்கியால் சுட்டு 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சுடும் வீரரான இவர் ‛ஏர்கன்' துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருத்திகா. இவரது மகன் பெயர் யுவன்.

இவர் 10ம் வகுப்பு படித்து வந்தார். துப்பாக்கி சுடும் வீரராக யுவன் இருந்தார். பல்வேறு போட்டிகளில் அவர் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் தான் இன்று அவர் திடீரென்று ‛ஏர்கன்' துப்பாக்கியை பயன்படுத்தி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மதுரை மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
யுவனின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யுவன் தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
யுவன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததா? மனஅழுத்தத்தில் இருந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications