தடுப்பூசி பாதுகாப்பானது.. நானும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வேன்.. முதல்வர்
மதுரை: கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, நானும் கொரோனா தடுப்பூசியை நிச்சயம் போட்டுக் கொள்வேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதே போல் மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

ராஜாஜி அரசு மருத்துவமனையின் டாக்டர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என மோடி எடுத்த விடாமுயற்சிக்கு வெற்றியே இந்த தடுப்பூசியாகும்.
கொரோனா தடுப்பூசியை நான் நிச்சயம் போட்டுக் கொள்வேன். முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்க அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications