போலீஸ் கஸ்டடியில் கைதி மரணம்.. போலீசார் தாக்கியதில் இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு! ஷாக்
மதுரை: மானாமதுரையில் காவல்துறை சட்டவிரோதமாக துன்புறுத்தியதில் கைதி இறந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 பேரை வாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரையில் மார்ச் 6இல் இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கைதானவர்களில் ஒருவர் ஆகாஷ். தப்பி ஓடும் போது பாலத்தில் இருந்து ஆகாஷ் கீழே குதித்ததில் அவருக்கு காயம் என காவல்துறை கூறியது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றபோது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 6-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் ஆகாஷ் என்பவர் மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆகாஷ் வெட்டியதில், ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அழகர் ஆகிய இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில், இருவர் ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியும் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் மற்றொருவரைத் துரத்தும் காட்சியும் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆகாஷுக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது பயணத்தின் போது அவருக்குத் திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவ உதவிக்கு முயற்சி செய்தும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைக்குச் செல்லும் வழியில் கைதி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், ஆகாஷை அடித்து கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications