Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலீஸ் கஸ்டடியில் கைதி மரணம்.. போலீசார் தாக்கியதில் இறந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு! ஷாக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மானாமதுரையில் காவல்துறை சட்டவிரோதமாக துன்புறுத்தியதில் கைதி இறந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 பேரை வாளால் வெட்டிய வழக்கில் கைதான ஆகாஷ், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரையில் மார்ச் 6இல் இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கைதானவர்களில் ஒருவர் ஆகாஷ். தப்பி ஓடும் போது பாலத்தில் இருந்து ஆகாஷ் கீழே குதித்ததில் அவருக்கு காயம் என காவல்துறை கூறியது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றபோது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Custodial Death Allegation in Manamadurai

கடந்த 6-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் ஆகாஷ் என்பவர் மதுபோதையில் இருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆகாஷ் வெட்டியதில், ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அழகர் ஆகிய இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில், இருவர் ஒருவரை அரிவாளால் வெட்டும் காட்சியும் மேலும் ஒருவர் ஆயுதங்களுடன் மற்றொருவரைத் துரத்தும் காட்சியும் பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர். கைது செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஆகாஷுக்கு கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரை மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது பயணத்தின் போது அவருக்குத் திடீரென கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மருத்துவ உதவிக்கு முயற்சி செய்தும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறைக்குச் செல்லும் வழியில் கைதி உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், ஆகாஷை அடித்து கொன்று விட்டதாக அவரின் உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+