என் நண்பன் வெங்கடேசன் கிட்ட இந்த இரண்டுமே அதிகமாகவே இருக்கு.. ஜெயிப்பான்.. சமுத்திரக்கனி பிரச்சாரம்
மதுரையில் சு வெங்கடேசனை ஆதரித்து இயக்குனர் சமுத்திரகனி பிரச்சாரம் செய்தார்.
மதுரை: "நேர்மையும் உண்மையும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். அது என் நண்பன் சு.வெங்கடேசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு" என்று இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை சிபிம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பலர் கூட்டணி கட்சி சார்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் சமுத்திரகனி தனிப்பட்ட முறையில் வந்து வெங்கடேசனுக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
"முதலில் இங்கு நான் எந்த கட்சிக்கும் ஆதரவாக வரவில்லை. என்னுடைய மிக நெருங்கிய நண்பர் வெங்கடேசன். அதற்காகதான் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறேன். கட்சிகளுக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்ட என் நண்பனுக்காக வந்திருக்கிறேன்.
அதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்
தலையெழுத்து
பரபரப்பான தேர்தல் களத்தை சந்திக்கிறோம். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியது தேர்தல். முதல் தலைமுறை வாக்காளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் கவனமா வாக்களியுங்கள். நீங்கள் தான் ஒட்டு மொத்த தலை எழுத்தையும் மாத்த போறீங்க.
நாகரீகம்
பரபரப்பான தேர்தல் களத்தை சந்திக்கிறோம். மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியது தேர்தல். முதல் தலைமுறை வாக்காளர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் கவனமா வாக்களியுங்கள். நீங்கள் தான் ஒட்டு மொத்த தலை எழுத்தையும் மாத்த போறீங்க.
எழுத்து
மதுரை வரலாற்றில் காவல் கோட்டத்தில் சொன்ன மாமனிதன், வேள்பாரி போன்றவை எல்லாம் தொட முடியாத விஷயங்கள். இதைப்பற்றி எழுதுவதைப்பற்றி யாரும் நினைச்சுகூட பார்க்க முடியாது. ஆனால் அவற்றினை எளிமையாக அனைவருக்குமே புரிய வைத்தவர் வெங்கடேசன்.
நேர்மை
இப்படி ஒரு அற்புதமான மனிதரை தேர்ந்தெடுத்தால் மதுரைக்கு மிகப்பெரிய மாற்றம் வரும். அடுத்த தலைமுறையும் கட்டாயம் மலரும். வெறும் பணத்தை மட்டும் வைத்து ஜெயிக்க முடியாது. நேர்மை இருக்க வேண்டும், உண்மை இருக்க வேண்டும் அது வெங்கடேசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.
மாற்றம்
எதிரே இருப்பவர்கள் பற்றி நான் எந்த குறையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம ஆதரிப்பவர்களை வரவேற்றால் அது போதும். அவர்கள் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்" என்றார்.