அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம்- திவாகரன் பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து தொடர் பேச்சுவார்த்தை மூலம் தினகரன், சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு இரு அணிகளும் ஒன்றிணைந்தன.

இந்நிலையில் தற்போது அதிமுகவை கைப்பற்ற தினகரன் துடித்துக் கொண்டிருக்கிறார். தினகரனை நம்பிய 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதுதான் மிச்சம். தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்ற வருத்தம் அவர்களை தொற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

[கண்ணா இன்னொரு லட்டு.. இன்னொரு அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்!]

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

இந்நிலையில் 18 பேரும் ஹைகோர்ட் தீர்ப்பை உணர்ந்து மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் திடீரென அழைப்பு விடுத்தனர். இதை கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என 18 பேரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

திவாகரன்

திவாகரன்

இந்நிலையில் அதிமுகவுக்குள் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மீண்டும் உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தவறான முடிவுகள்

தவறான முடிவுகள்

அப்போது அவர் கூறுகையில் அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம். அதிமுகவில் சசிகலா எடுத்த தவறான முடிவுகளே இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணம்.

யாரோ தடுக்கின்றனர்

யாரோ தடுக்கின்றனர்

அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தது பெரிய தவறு ஆகும். 18 எம்எல்ஏக்களும் மீண்டும் திரும்ப அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர்களை செல்ல விடாமல் யாரோ தடுக்கின்றனர் என்றார் திவாகரன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+