திமுக குழு அமைக்கும்னு 36 நாட்களாக காத்திருக்கிறோம்.. கொந்தளிக்கும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
மதுரை: திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கும் என்று 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தோழமை கட்சிகளுக்கு மரியாதை அளிப்பதாக 36 நாட்களாக காத்திருப்பதாக கூறிய மாணிக்கம் தாகூர், பேச்சுவார்த்தை குழு அமைத்த பின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தலைமை இன்னும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழுவையே அமைக்காமல் இருக்கிறது. டிசம்பர் மாதத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது குழு அமைப்பதாக ஸ்டாலின் கூறி இருந்தார்.

தாமதம் செய்யும் திமுக
ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்த பின்னரும் திமுக தலைமை இன்னும் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்காமல் இருக்கிறது. இருப்பினும் கூட்டணி கட்சிகளுடன் திமுக சீனியர் நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் தொகுதி பங்கீட்டு குழுவை அமைக்க திமுக வேண்டுமென்றே தாமதம் செய்து வருவதாக பார்க்கப்படுகிறது.
மாணிக்கம் தாகூர் பேட்டி
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை. எல்&டி நிறுவனம் விரைவில் கட்டுமான பணிகளை முடிப்பேன் என்று கூறி இருக்கிறார்கள்.
திமுக பேச்சுவார்த்தை குழு
அதேபோல் டிசம்பர் 3ஆம் தேதியே தமிழக காங்கிரஸ் தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 36 நாட்களாக திமுக குழு அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி காத்திருக்கிறது. குழு அமைத்த பின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவோம். நாங்கள் திமுக கூட்டணியுடன் பயணித்து வருகிறோம்.
மரியாதை முக்கியம்
திமுக கூட்டணியில் உரிய மரியாதை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. தமிழக காங்கிரஸில் இருந்து 39 தலைவர்களை டெல்லி தலைமை அழைத்து தனித்தனியாக கருத்து கேட்டது. எங்களின் கருத்துக்களை உரியவர்களிடம் கட்சித் தலைமை கூறி இருக்கும் என்று நம்புகிறோம். தோழமை கட்சிகளை காங்கிரஸ் கட்சி விமர்சிக்காது.
பிரதமரின் மதுரை வருகை
அதேபோல் தமிழ்நாட்டிற்காவது பிரதமர் மோடி பயமின்றி வருகிறார். அதிமுக கூட்டணியை அமித்ஷா 3வது இடத்திற்கு தள்ளிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி சீமானுடன் போட்டி போட்டு வருகிறது. அந்த போட்டியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். பிரதமர் மதுரை வரும் போதாவது மதுரை எய்ம்ஸின் உண்மை நிலை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications