அழைப்புக் கடிதம் தொடங்கி பிரச்சார வேன் வரை... மு.க.அழகிரிக்காக வியூகம் வகுத்து கொடுத்த மகன் துரை..!
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்தபடி ஆதரவாளர்களை சந்தித்து தனது மனக் குமுறலை கொட்டி தீர்த்திருக்கிறார்.
எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் திரண்டிருந்ததால் மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதியை பாராட்டியிருக்கிறார்.
ஏனெனில் அழைப்புக் கடிதம் தொடங்கி மு.க.அழகிரியை பிரச்சார வேனில் பவனி வர வைத்தது வரை மகன் துரை தயாநிதி தான் கவனித்துக்கொண்டார்.

அழகிரி பேட்டி
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்து விட்டு திரும்பிய மு.க.அழகிரி, செய்தியாளர்களிடம் திமுக மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி சென்றார். பிறகு ஓரிரு நாட்களில் மதுரையில் ஜனவரி 3-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.
Recommended Video


ஆட்கள் திரட்டி
அந்த அறிவிப்பை அழகிரி வெளியிட்டது முதல் அவருக்காக பம்பரமாக சுழன்று பணியாற்றத் தொடங்கினார் துரை தயாநிதி. அப்பாவுக்காக பணிகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்த துரை தயாநிதி, ஆதரவாளர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி முதல் கூட்டத்திற்கு ஆட்கள் திரட்டி வருவது வரை அவரே அனைத்தையும் மேற்கொண்டார்.

மகிழ்ச்சி
மேலும், ஆதரவாளர்களை சந்திக்க செல்லும் போது வழக்கமான காரை தவிர்த்து அழகிரியை பிரச்சார வேனில் அமரவைத்து அழைத்துச் சென்றவரும் துரை தயாநிதி தான். பல ஆண்டுகளுக்கு பிறகு பிரச்சார வேனில் நின்றவாறு ஆதரவாளர்களை நோக்கி கையசைத்து சென்ற அழகிரிக்கு இந்த நிகழ்வு அளவற்ற மகிழ்ச்சியையும் பழைய நினைவுகளையும் கொண்டு வந்திருக்கிறது.

பரிச்சயம்
ஒரு வழியாக ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்த மு.க.அழகிரி, இதற்காக உழைத்த துரை, மன்னன், கோபிநாதன், ராஜ், உள்ளிட்ட பலருக்கும் நேற்றிரவு நன்றி சொல்லியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தனது பேச்சு எப்படி என்பது பற்றி மாவட்ட அளவில் தனக்கு பரிச்சயமான நபர்களை தொடர்பு கொண்டு ரியாக்ஷன் கேட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications