Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் 4 நாட்கள்.. முக்குலத்தோர் ஆதரவை பெறும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக கணக்கு என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விலகலுக்கு பின், அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் முக்குலத்தோர் சமூக வாக்குகளை சரி செய்யும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழக அரசியலில் மதுரை மாவட்டத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடத்தப்பட்ட நிலையில், தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை அருகே பாரபத்தியில் நடத்தப்பட்டது. தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாவட்டத்தில் மட்டும் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

Edappadi Palaniswami Targets Mukkulathor Community

செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரை மதுரையின் 10 தொகுதிகளிலும் சுற்றி வந்து மக்களை சந்திக்கிறார். 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி மதுரையில் இருந்து தொடங்கியது என்று சொல்லலாம். ஏனென்றால் அதிமுகவின் கோட்டையான மதுரையின் 10 தொகுதிகளில் திமுக 5ஐ கைப்பற்றியது. இதன்பின் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்.

தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா என்று 3 முக்கிய நிர்வாகிகள் இருந்தும் மதுரையை கைப்பற்ற முடியாது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் மதுரையில் ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ உள்ளிட்டவை அதிமுகவை இன்னும் பின்னுக்கு தள்ளியது.

விஜய் மாநாட்டில் குவிந்த கூட்டமும் அதிமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனென்றால் மதுரையின் பல்வேறு தொகுதிகளிலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி நிர்ணயிக்கப்படும். இதனை சட்டசபைத் தேர்தலுக்கு முன் சரி செய்யும் கணக்கில் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதற்கான முதற்கட்டமாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பரங்குன்றம், செப்டம்பர் 2ஆம் தேதி மேலூரிலும், செப்டம்பர் 3ஆம் தேதி மதுரை மேற்கு, மத்திய தொகுதி மற்றும் மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளிலும், கடைசி நாளில் சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளிலும் மக்களை சந்திக்க உள்ளார். அதேபோல் வணிகர்கள், முக்குலத்தோர் சமூக பிரதிநிதிகள், செளராஷ்டிரா சமூக பிரதிநிதிகள் ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் விலகலுக்கு பின் முக்குலத்தோர் ஆதரவு அதிமுகவுக்கு குறைந்திருக்கும் நிலையில், அதனை சரி செய்வதே எடப்பாடி பழனிசாமியின் முதன்மை நோக்கமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த 4 நாள் பயணத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் சில ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளையும் சந்திக்க வைக்க அதிமுகவினர் ஆலோசித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+