தேர்தல் ஸ்பெஷல்: தாமரைக் கட்சிக்கு முக்கியத்துவம்.. சோகத்தில் மதுரை அதிமுகவின் முக்கிய தலை!
மதுரை: பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்ட நாள் தொடங்கி, மதுரை மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக அதிமுக நிர்வாகிகள் கவலை கொண்டுள்ளனர். ஏற்கனவே சொந்த தொகுதியில் ஆளுங்கட்சி அமைச்சரின் தீவிரப் பணியால் சோர்ந்து போயிருக்கும் அந்த நிர்வாகி, கட்சித் தலைமையும் பாஜகவுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தி இருப்பதால் கவலை அடைந்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் மதுரையைச் சேர்ந்த முக்கிய அதிமுக நிர்வாகி திமுக பக்கம் தாவ இப்போதே யோசனையில் இருக்கிறார். ஏற்கனவே தென் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இபிஎஸ் காரில் இருந்து இறக்கிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். இருப்பினும் அவமானத்தை கடந்து கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டினார்.

ஆனால் ஆளுங்கட்சி அமைச்சரின் பணிகளால் மிரண்டு போன அந்த நிர்வாகி, அதிமுக தலைமையிடம் தொகுதி மாறுவது தொடர்பாக கேட்டிருக்கிறார். ஆனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் தொகுதி மாறக் கூடாது என்பதில் அதிமுக தலைமை பிடிவாதமாக இருக்கிறது. இதனால் அதிமுக நிர்வாகி மனதளவில் சோர்ந்து போய்விட்டார்.
இருப்பினும் கட்சிப் பணிகளை மேற்கொண்ட வந்தவருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல் ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதானது அண்மையில் மதுராந்தகத்தில் நடக்கவிருந்த என்டிஏ பொதுக்கூட்டம் முதலில் மதுரையில் நடப்பதாக இருந்தது. அப்போது பாஜக நிர்வாகிகள் தரப்பில் அனுமதி கடிதம் கோரி மாவட்ட கண்காணிப்பாளரை சந்திக்க சென்றனர்.
அப்போது அதிமுகவின் 3 முக்கிய நிர்வாகிகளும் பாஜக நிர்வாகியின் தலைமையில் சென்று அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அதிமுக நிர்வாகி, பாஜகவின் நிர்வாகிகள் பெயரை கூட சொல்ல மனசு இல்லாமல் நின்றுக் கொண்டிருந்தார். அவருக்கு சொல்லி கொடுத்து பெயரை சொல்ல வைத்தனர்.
அப்போதும் கூட மதுரைக்கே உரித்தான நக்கலுடன் பேசிவிட்டு சென்றார். இதன்பின் அதிமுக நிர்வாகி தொகுதி பணிகளில் பெரிய ஆர்வம் இல்லாமல் கவலையோடு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மதுரையில் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய 2 தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. இதனால் பாஜக கூடுதல் அதிகாரம் செலுத்துவதாக ஆதரவாளர்களிடம் புலம்பி வருகிறார்.
அதேபோல் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தால், உடனடியாக திமுகவில் ஐக்கியமாகவும் தயாராகிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் தேர்தலுக்கு மதுரை அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications