Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சாரத்தை வழிமறித்த பறக்கும் படையினர்! பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருந்த போது சிவகங்கை அருகே விஜய்யின் பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

vijay campaign

பிறகு அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரச்சார வாகனத்தில் சென்றார். திருப்பத்தூர் அருகே விஜய் பிரச்சார வாகனத்தை இடைமறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பணம், பரிசுப் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என்பதை தொடர்ந்து அவரது வாகனத்தை செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்தது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதி கடந்த மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது. இதற்காக தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை செய்து பறிமுதலையும் செய்கிறார்கள்.

திருவாரூருக்கு பரப்புரை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினின் வாகனமும் சோதனை செய்யப்பட்டது. அது போல் எடப்பாடி பழனிசாமி, சீமான், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் வாகனங்களையும் சோதனை செய்கிறார்கள்.

உதகை சட்டசபை தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+