தேர்தல் வெற்றி செல்லாது…. காங்., முன்னாள் எம்எல்ஏ வேல்துரை சம்பளத்தை திருப்பி செலுத்த உத்தரவு
மதுரை: தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டால் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 2006 - 2011 வரையிலான காலத்தில் சேரன்மாதேவி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேல்துரை சம்பளத்தை 4 வாரங்களுக்குள் திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2006 ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளராக களமிறங்கிய மனோஜ் பாண்டியன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஒப்பந்தப் பணிகள்
அதில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேல்துரை அரசுக்கு சொந்தமான நபார்டு வங்கியின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்றும் விதிகளின்படி இது தவறு என்பதால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் மேல்முறையீடு செய்தார் அப்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவர் வெற்றி செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஓய்வூதிய பயன்கள் கிடைக்காது
முன்னர், ஒரு எம்எல்ஏ தனது பதவி காலம் முழுவதையும் அனுபவித்த பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு ஓய்வூதிய பயன்கள் கிடைக்காது. ஏற்கனவே பெற்ற சம்பளம் படிகளையும் திருப்பி அளிக்க தேவையில்லை. அதேசமயம் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி பறிபோகும்
தற்போதைய நடைமுறையில், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் பதவி பறிபோகும் சூழலில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை 4 வாரங்களில் ரூ.21.58 லட்சம் சம்பளத்தை திருப்பி செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications