அனுமதி வாங்காமல் ரோடு ஷோ.. கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம்! - அரசு தரப்பு வாதம்
மதுரை: "கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம். அவர்கள் ரோடு ஷோ செய்ய அனுமதி வாங்கவில்லை. ஆனால் அதை மீறி விஜய் ரோடு ஷோ நடத்தினார்" என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்திருக்கிறார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், முன்ஜாமீன் கேட்டு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் இணை செயலாளர் சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோ மதுரை உயர்நீதிமன்ற கிடையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது, "கூட்டத்தை கட்டுப்படுத்துவது எங்கள் பொறுப்பு கிடையாது. அது முழுக்க முழுக்க காவல்துறையின் பொறுப்புதான். காவல்துறை தடியடி நடத்தியதால்தான் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எனவே எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில், மாவட்ட செயலாளர் மீதுதான் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்" என்று வாதங்களை முன்வைத்திருந்தனர்.
ஆனால், அரசு தரப்பு இந்த விவகாரத்திற்கு காரணம் விஜய்தான் என்று குற்றம்சாட்டியுள்ளது. "கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம். அவர்கள் ரோடு ஷோ செய்ய அனுமதி வாங்கவில்லை. ஆனால் அதை மீறி விஜய் ரோடு ஷோ நடத்தினார்" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications