Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்பலாம் போலீஸ் பாதுகாப்பு கேட்பது ஃபேஷனா போச்சு! திருச்சி சூர்யா சிவா மனுவை டிஸ்மிஸ் செய்த ஐகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா மனுவை தள்ளுபடி செய்துள்ளது ஐகோர்ட் கிளை. போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது இப்போதெல்லாம் ஃபேஷனாக மாறிவிட்டது என ஐகோர்ட் கிளை நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், தான் பொதுமக்கள் சேவைக்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

High court dismisses Trichy Surya siva plea

நீதிபதி சொன்ன கருத்து: இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, "இப்போதெல்லாம் ஒருவர் 2 போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது ஃபேஷனாக மாறிவிட்டது" என கருத்து தெரிவித்து, பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

திருச்சி சூர்யா சிவா: திமுக முன்னணி தலைவர்களுள் ஒருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் தனக்கும் தனது தந்தைக்கும் திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு திமுகவில் இருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

பாஜகவில் இணைந்த சூர்யா சிவா, அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டார். மிக விரைவாகவே பாஜகவில் வளர்ந்து வந்த அவருக்கு ஓபிசி அணியில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் பாஜகவின் சிறுபான்மை அணியைச் சேர்ந்த டெய்சிக்கும் திருச்சி சிவாவுக்கும் இடையே சிறுபான்மை அணியில் பதவி வழங்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.

ஆடியோ விவகாரம்: சூர்யா சிவா, டெய்சியை ஆபாசமாக பேசும் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் பின்னர் சமரசம் செய்து கொண்டாலும், சூர்யா சிவா தற்காலிகமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, தான் பாஜகவில் இருந்து விலகுவதாகக் கூறி, பாஜகவினரை விமர்சிக்கத் தொடங்கினார். அப்போது முதல் சூர்யா சிவா எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் சூர்யா.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம், திருச்சி சூர்யா சிவா, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. அப்போது, பாஜகவில் திருச்சி சூர்யா சிவாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார். திருச்சி சூர்யா சிவா மீதான புகாரில் பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடிப்படையில் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா தான் வகித்துவந்த பதவியில் மீண்டும் தொடர்வார் என அண்ணாமலை அறிவித்தார்.

குற்ற வழக்குகள்: திருச்சி சூர்யா சிவா மீது பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சி பகுதியில் தனியார் பள்ளி இடத்தை தராமலும், வாடகை தராமலும் ஏமாற்றி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் மீது பெண் ஒருவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஆம்னி பேருந்தை கடத்திய வழக்கில் சூர்யா சிவா கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+