Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. ரசாயனம் கலக்காத சிலைகளை மட்டுமே தயாரிக்க வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை தயார் செய்து, வழிபட்டு, பின்னர் ஊர்வலமாகச் சென்று அதனை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். விநாயகர் சிலைகள் ரசாயன கலவைகள் சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.

High court order to government to ensure chemical free vinayagar idols

இந்நிலையில், ரசாயன கலவையால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சரியாக கரைவதில்லை மற்றும் அதனால் நீர் மாசுபாடு ஏற்படுவதால், களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விநாயகர் சிலைகளை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.

மேலும், விநாயகர் சிலையை செய்வதற்கு, பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை (இன்று) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ரசாயனக் கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும். ரசாயனம் கலப்படம் இருக்கக்கூடிய சிலைகளை ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி விநாயகர் சிலைகளையே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும், நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+