நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. ரசாயனம் கலக்காத சிலைகளை மட்டுமே தயாரிக்க வேண்டும்.. ஐகோர்ட் உத்தரவு!
மதுரை: ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகள் மட்டுமே கரைக்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை தயார் செய்து, வழிபட்டு, பின்னர் ஊர்வலமாகச் சென்று அதனை கடல், குளம் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள். விநாயகர் சிலைகள் ரசாயன கலவைகள் சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரசாயன கலவையால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சரியாக கரைவதில்லை மற்றும் அதனால் நீர் மாசுபாடு ஏற்படுவதால், களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விநாயகர் சிலைகளை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.
மேலும், விநாயகர் சிலையை செய்வதற்கு, பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை (இன்று) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ரசாயனக் கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும். ரசாயனம் கலப்படம் இருக்கக்கூடிய சிலைகளை ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி விநாயகர் சிலைகளையே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும், நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications