தூத்துக்குடி பெண்ணுக்கு 60000 ரூபாய்.. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தவர்கள் கவனிக்க வேண்டியவை
மதுரை: குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்தால், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எதுவாக இருந்தாலும் டாக்டர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற முடியும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாசுப்பிரமணியன் மதுரை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைக்கு ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரிய சிக்கலாக இருக்கிறது. கல்விக்கட்டணம் அந்த அளவிற்கு அதிகமாக உள்ளது. அதனால் தமிழ்நாட்டில் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது இல்லை.. அதற்கு மேல் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் தமிழ்நாட்டில் பெண்களே இந்த சிகிச்சையை பிரசவம் முடிந்த கையோடு மேற்கொள்கிறார்கள். ஆண்களுக்கும் இந்த சிகிச்சை உள்ளது. ஆண்களுக்கு மிகவும் எளிதானது. ஒரே நாளில் இயல்பாக இருக்க முடியும். ஆனால் இந்த சிகிச்சையை பல ஆண்கள் செய்து கொள்ள முன்வருவது இல்லை. பெண்களே செய்து கொள்கிறார்கள்.

ஆண், பெண் என இருவருமே நிரந்தர கருத்தடை சிகிச்சை செய்து கொள்ள முடியும். ஆனால் நிரந்தர சிகிச்சை என்றாலும், சில நேரங்களில் இந்த சிகிச்சை தோல்வியடைகிறது. இது ஏழை குடும்பங்களை பெரிய அளவில் சுமையாக மாறுகிறது. அப்படி நேர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற முடியும். கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கருவுற்றவரின் மனைவிக்கு 60 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
மீண்டும் கர்ப்பம்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாசுப்பிரமணியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது மனைவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தோம். ஆனால் அவருக்கு இந்த ஆபரேஷனை டாக்டர்கள் முறையாக செய்யவில்லை. இதனால் அவர் மீண்டும் கர்ப்பம் ஆனார். எனவே கவனக்குறைவாக செயல்பட்ட அரசு மருத்துவமனை டாக்டர் உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
கருப்பை குழாய் வளரும்
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மருத்துவமனை டாக்டர் சார்பில் ஆஜரான வக்கீல், சில பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பின்பு கருப்பை குழாய் மீண்டும் வளர்ந்துவிடும். இதனால் மீண்டும் கருவுற வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆபரேஷனை குறை கூற இயலாது என வாதாடினார்.
60000 வழங்க உத்தரவு
விசாரணை முடிவில். கருத்தடை சிகிச்சை தோல்வியுறும் போது இழப்பீடாக ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகையை பெற மனுதாரர் குடும்பத்தினருக்கு தகுதி உள்ளது. எனவே ரூ.60 ஆயிரம் இழப்பீடு தொகையை மனுதாரருக்கு 2 வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ட்யூபெக்டமி சிகிச்சை
பெண் கருத்தடை அறுவை சிகிச்சைக்கு ஆங்கிலத்தில் ட்யூபெக்டமி என்று பெயர் ஆகும். இந்த சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்றால், பெண்ணின் உடலில் உள்ள கருமுட்டை குழாய்கள் ஒரு செ.மீ அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்டு தைக்கப்பட்டுவிடும். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் உருவாகும் கருமுட்டை. கர்ப்பப்பையை சென்றடையாமல் தடுக்கப்படும். இதனால் கருமுட்டை விந்தணுக்களுடன் சேர்வதை தடுக்க முடியும் என்பதால் நிரந்தர கருத்தடை சிகிச்சையாக பார்க்கப்படுகிறது.
சிகிச்சை தோல்வி அடைய வாய்ப்பு
இந்த சிகிச்சை சில நேரங்களில் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது . ஏனெனில் சில பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த பின்பு கருப்பை குழாய் மீண்டும் வளர்ந்து விடும் வாய்ப்பு உள்ளதே காரணம் ஆகும். அதன் காரணமாகவே கருத்தடை சிகிச்சை தோல்வியுறும் போது இழப்பீடாக ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த பணத்தை பெற நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications