காரணமே வேற.. ஆசை யாரை விட்டது.. இளைஞருக்கு 2வதாக சிக்கிய பெண்.. அதுக்காக இப்படியா?.. பரபர மதுரை
மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை: 2வது கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கணவன் செய்த காரியத்தால், முதல் மனைவி அதிர்ந்து போனார்.. கடைசியில் போலீசில் புகார் தரும் அளவுக்கு சென்றுவிட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் மோனிஷா.. 23 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் பாலகிருஷ்ணன்.. 30 வயதாகிறது..
சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர்களுக்கு கல்யாணமாகி 3 வருடமாகிறது..

மோனிஷா
ஆனால், தம்பதி இடையே அடிக்கடி பிரச்சனை வந்து போயுள்ளது.. இவர்களின் குடும்பத் தகராறையும் யாராலுமே தீர்த்து வைக்க முடியவில்லை.. ஒரு கட்டத்தில் மனைவி மோனிஷா கோபித்து கொண்டு, அம்மா வீட்டுக்கு போய்விட்டார்.. கடந்த சில மாதங்களாகவே அம்மா வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்.. சண்டை போட்டு பல காலம் ஆகியும், இன்னும் சமாதானம் ஆகி கணவர் வீட்டுக்கு மோனிஷா வரவில்லையாம்.. இதனால் மோனிஷா மீது வெறுப்பு கொண்டார் பாலகிருஷ்ணன்..

விவாகரத்து
வீட்டிலிருந்து வராததால் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத பாலகிருஷ்ணன் வேறொரு திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது... ஆனால், முறைப்படி விவகாரத்தும் பெறவில்லை என்பதால், மனைவியின் அனுமதியும் பெற முடியாது என்பதால், மனைவி இருப்பதையே மறைக்க நினைத்தார்.

மோனிஷா
அதற்காக மோனிஷா இறந்துவிட்டதாக சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை அச்சடித்தார்.. வாட்சப், ஃபேஸ்புக் என மொத்த சோஷியல் மீடியாவில் மோனிஷாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை வெளியிட்டார்.. இதை பார்த்ததும் பாலகிருஷ்ணன் சொந்தக்காரர்கள் எல்லாரும், மோனிஷா உண்மையிலேயே இறந்துவிட்டதாக நினைத்தார்கள். இதையே சாக்காக வைத்து, தன்னுடைய சொந்தக்கார பெண் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார் பாலகிருஷ்ணன்..

கண்ணீர் அஞ்சலி
இதனிடையே, தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை, சோஷியல் மீடியாவில் பார்த்து அதிர்ந்து போனார் மோனிஷா.. இன்னொரு கல்யாணமும் பாலகிருஷ்ணனுக்கு நடந்துவிட்டதை அறிந்து ஆவேசமான மோனிஷா, தான் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை டிசைன் செய்து, சோஷியல் மீடியாவில் பரவவிட்ட கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அருகே உள்ள சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரையும் தந்தார்.

அதிர்ச்சி
இந்த புகாரின்பேரில் போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்... மனைவி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வேலைமெனக்கெட்டு டிசைன் செய்து, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டதுடன், தன்னுடைய சொந்தக்காரர்கள் நம்பும் வரையில் அந்த போஸ்டரை ஷேர் செய்து கொண்டே இருந்து, இறுதியில் 2வது கல்யாணமும் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications