போலி ஆதார் அட்டை தயாரித்து கிரையப்பத்திரம்.. அதிர வைத்த மோசடி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: மதுரையை சேர்ந்த சூர்யகலா என்பவர் தனது சொத்துக்களை சிலர் போலி ஆதார் அட்டை தயாரித்தது கிரையப்பத்திரம் பதிவு செய்துவிட்டார்கள் என்றும், இதுபற்றி நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று வாக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், போலீஸ் உதவி கமிஷனர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சூர்யகலா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்கு சொந்தமான சொத்துகளை தனிநபர்கள் சிலர், போலி ஆதார் அடையாள அட்டை தயாரித்து கிரையப்பத்திரம் பதிவு செய்துவிட்டார்கள். இந்த விவரம் எனக்கு தெரிந்த உடனே நாங்கள், மதுரை திருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் எங்களுடைய புகார் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.

இதனால் நாங்கள் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். கோர்ட்டின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 120 (பி) உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் மதுரை திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தவில்லை. சொத்து மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும் இல்லை. வழக்கை திருநகர போலீசார் கிடப்பில் போட்டுவிட்டனர். ஆகவே திருநகர் போலீசாரிடம் நிலுவையில் உள்ள இந்த வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் சூர்யகலா கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், போலி ஆதார் அட்டை தயாரித்து கூட்டுச்சதியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக, மனுதாரர் தொடர்பான வழக்கை போலீசார் கிடப்பில் போட்டு உள்ளது சட்டவிரோதம் என்று தெரிவித்தார். விசாரணை முடிவில், மனுதாரர் குற்றச்சாட்டின் பேரில் மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்த வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் திருப்பரங்குன்றம் உட்கோட்டம் உதவி போலீஸ் கமிஷனரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். அவர், இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தி 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications