காவல் சித்ரவதைகளை ஒழிக்க வேண்டும்! மதுரையில் அணி திரண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள்!
மதுரை: காவல் சித்ரவதைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கருத்தரங்கம் நடத்தியுள்ளனர்.
அதில் காவல் விசாரணை, கைது உள்ளிட்ட விவகாரங்களின் போது போலீஸார் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற 41 வழிகாட்டு நெறிமுறைகளை பதாகை மூலம் வெளியிட்டனர்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

காவல் சித்ரவதை
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோர்க்கான ஐ.நா.வின் சர்வதேச ஆதரவு நாள் கருத்தரங்கம் மதுரையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது. அதில், காவல் விசாரணை, கைது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் வெளியிட்ட 41 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகையை மூத்த வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வெளியிட்டார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன் அவர்கள் பேசும் போது, ''உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும், காவல் நிலையத்தின் நுழைவு வாயில், வெளியேறும் வாயில், கைதி அறையின் வெளிப்பகுதி, வராண்டா, வரேற்பறை, காவல் ஆய்வாளர் அறை, சார்பு ஆய்வாளர் அறை, காவல்நிலைய சுற்று பகுதி, காவல் நிலைய பின் பகுதி ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும். இரவிலும் தெளிவாக ஒளிப்பதிவு செய்யும் தொழில்நுட்பத்துடன் கேமரா இருக்க வேண்டும். அதன் பதிவானது குறைந்தது 18 மாதங்களாவது பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று விரிவாக எடுத்துரைத்தார்.

ஜவாஹிருல்லா பேச்சு
சிறப்புரையாற்றிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது, "சித்திரவதையை செய்பவர்கள் காவல்துறையினர், பாதிப்படைபவர்கள் பாமரமக்கள் என்று நாம் நினைத்தால் அது தவறு. இன்றைய இந்தியாவில் அரசின் தவறைச் சுட்டிகாடுபவர்கள் அரச பயங்கரவாதத்தால், கொடுங்கோன்மையால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் வாழும் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலம் கவலைக்குரியதாக உள்ளது.''

புல்டோசர்கள்
''புல்டோசர்களைக் கொண்டு அரசு வீடுகளை இடிக்கவில்லை, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே இடிக்கிறார்கள். நாம் வாழக்கூடிய மதச்சார்பற்ற இந்தியாவின் முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறோம். மிகவும் மோசமான ஒரு சூழலில் இருக்கிறோம். எனவே காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு தமிழக எல்லைகளைத் தாண்டி செயற்பட வேண்டிய தேவை உள்ளது" என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பேசிய அனைவரும் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையை இந்தியா ஏற்புறுதி செய்ய வேண்டும். சித்திரவதையற்ற உலகு படைக்க அனைவரும் இணைந்து செயலாற்றுவோம்'' என்று வலியுறுத்தினர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications