கிராம மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அங்கன்வாடி அன்னலட்சுமி மாற்றம்.. மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ்
மதுரை: கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து அன்னலட்சுமி உள்ளிட்ட அங்கன்வாடி பணியாளர்களை இடம் மாற்றம் செய்தது ஏன் என வரும் ஜுலை 17ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும் படி மதுரை கலெக்டருக்கு மனித உரிமை ஆணயத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் வலையப்பட்டி கிராம அங்கன்வாடி மையத்தில் சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு அன்னலட்சுமி மற்றும் ஜோதி லட்சுமி ஆகிய இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்று கூறி அவர்கள் சமைக்க அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இருவரையும் வேறு பகுதிகளுககு இடமாற்றம் செய்தது. ஜோதிலட்சுமி மதிப்பனூரிலும், அன்னலட்சுமி கிழவனேரிருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் வலையப்பட்டி கிராமத்தில் இரு பிரிவினரிடையே சமூக மோதல்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தாலும் தீர்வு ஏற்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியானது.இதன் அடிப்படையில் தானாக முன்வந்து மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை செயச்சந்திரன் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து இரு ஊழியர்களை இடமாற்றம் செய்தது ஏன்? இது மனித உரிமை மீறல் ஆகாதா? இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஜுலை 17ம் தேதி க்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications