Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எவ்வளவோ சொல்லி பார்த்தும், திட்டி பார்த்தும், மனைவி அபிநயா அடங்கவே இல்லை.. கள்ளக்காதலனை கைவிட தயார் இல்லை என்று புருஷனிடமே பகிரங்கமாக சொல்லிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவன், அபிநயாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.

நெடுங்குளம் வலசை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை பிரியன். 6 வருஷத்துக்கு முன்பு அபிநயா என்ற பெண்ணை உருகி உருகி காதலித்தார். கல்யாணம் செய்து கொள்ளவும் விரும்பினார். ஆனால் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.

Husband murdered wife near madurai

அதனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அபிநயாவை மணம் முடித்தார். பிறகு அதே பகுதியில் ஒரு வீடு கட்டி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

எனினும், அபிநயாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கம் ஆனது. இவர்களின் கள்ள உறவு வெள்ளை பிரியனுக்கு தெரியவந்ததும் அதிர்ந்து போனார். அதனால், மனைவியை கண்டித்தார். ஆனால் அபிநயா அதை காதிலேயே வாங்கவில்லை.

திரும்ப திரும்ப கள்ள உறவை தேடி சென்றார். இதுதான் தினமும் பிரச்சனையாக வெடித்தது. நேற்றும் சண்டை நடந்துள்ளது. ஆனால் கள்ள உறவை முறித்து கொள்ள முடியாது என்று அபிநயா திட்டவட்டமாக சொல்லிவிடவும், வெள்ளைபிரியனுக்கு ஆத்திரம் அதிகம் ஆகிவிட்டது.

அதனால் அபிநயாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். பிறகு அவரது உடலை தூக்கி கொண்டு போய், பக்கத்தில் இருந்த கிணற்று குழியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அலங்காநல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய வெள்ளைப்பிரியனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+