அதிமுகவுக்கு ஓட்டு போடாத வீட்டுக்காரருக்கு சோறு போடாதீங்க! பெண்களுக்கு செல்லூர் ராஜூ ‛ரெக்வெஸ்ட்’
மதுரை: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு வீட்டுக்காரர், பிள்ளைங்க ஓட்டுப்போடாவிட்டால் சோறு போடாதீங்க என மதுரை பெண்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி ஓட்டு சேகரித்தது அனைவரையும் கலகலப்பாக்கியது.
தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சிட்டிங் எம்பி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் பி சரவணன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா தேவி உள்ளிட்டவர்கள் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். மதுரை லோக்சபா தொகுதியை வெல்வது யார்? என்பது தொடர்பாக இவர்கள் 4 பேர் இடையே போட்டி நிலவுகிறது. இதுதவிர சுயேச்சையாகவும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களும் தங்களின் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உள்ளனர்.
இந்நிலையில் தான் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம் செய்தார். அப்போது பெண்கள் அதிகமாக கூடியிருந்தனர். இந்த வேளையில் தனக்கே உரித்தான பாணியில் பேசி பொதுமக்களை கலகலப்பாக்கினார். செல்லூர் ராஜூ பேசுகையில், ‛‛நாம எல்லாம் யாரு.. மதுரைக்காரங்க.. நீங்க மதுரைக்காரி.. வீரம் விளைஞ்சவங்க நாம..விவேகம் நிறைஞ்சவங்க.. நமக்கு உதவி செய்தால் உயிரையே கொடுப்போம்.
நம்மை ஏமாற்றினால் வச்சி செய்வோம்.. எப்படி செய்வோம்? எங்க சொல்லுங்க'' எனக் கேட்க பெண்கள் அனைவரும் ‛வச்சி செய்வோம்' என உற்சாகமாக கூறினார்கள். மேலும் தொடர்ந்து செல்லூர் ராஜூ பேசினார். அவர் பேசுகையில், ‛‛இந்த தேர்தலில் நாம வச்சி செய்யணும். நம்ம டாக்டரை (அதிமுக வேட்பாளர் சரவணன்) வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.
இந்த சமயத்தில் பிரசார வாகனத்தில் நின்ற அதிமுக வேட்பாளர் சரவணன் சிரித்தபடி கைக்கூப்பி நின்றார். இதனை கவனித்த செல்லூர் ராஜூ, ‛‛உங்களை பார்த்தவுடன் சிரிக்கிறார். அவரது சிரிப்பே தனி அழகையா. இவரை பார்த்தால் பார்த்து கொண்டே இருக்கலாம். பால்வடியும் முகம். இவருக்கு நீங்கள் எல்லாம் இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.
பக்கத்தில் போய் காய்கறி வாங்க சென்றாலும் சரி, பலசரக்கு கடைக்கு செல்லும் போதும் சரி யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று விவாதிக்க வேண்டும். மற்றவர்களிடம் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும் போடக்கூடாது. வீட்டுக்காரர்கிட்டயும் சொல்லனும்.. புள்ளைங்ககிட்டேயும் சொல்லனும்.. இல்லைனா சோறே போடமாட்டேன்னு சொல்லனும்'' என கலகலப்பாக பேசினார்.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications