100 நாள் வேலை திட்டப் பணிகள்.. ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க முடியுமா? கேள்வி கேட்ட நீதிமன்றம்!
100 நாள் வேலை திட்டப் பணிகளை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க வாய்ப்பு உள்ளதா என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விபரம் பெற்று பதில் அளிக்கவும் அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் கூலி வேலைக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த திட்டம் தேவைக்கேற்ப திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்த திட்டம் அளிக்கிறது.

100 நாட்கள் வேலை தர அரசு தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும். கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில், இந்த 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களில் முக்கிய பங்கு வகித்தது.
இந்த நிலையில் 100 நாள் வேலை திட்டம் தொடர்பான வழக்கில், நுாறு நாள் வேலையை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பு உள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தாருகாபுரம் மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தாருகாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணி நடக்கிறது. இதன் பொறுப்பாளர்கள் மூன்று மாதங்கள் தான் பணி புரிய வேண்டும். ஆனால் அங்கு பொறுப்பாளர் ஏழு மாதங்களாக தொடர்கிறார். அதேபோல் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்துகின்றனர். இதற்கு அரசு நிதியை பயன்படுத்துகின்றனர். அரசு நிதி விரயமாகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தேன். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணை நீதிபதிகள், நுாறு நாள் வேலையை ஜி.பி.எஸ். எனும் ஓரிடத்தை துல்லியமாக வானிலிருந்து செயற்கைக்கோள் துணையுடன் அறியும் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை செயலரிடம் விபரம் பெற்று அரசு வழக்கறிஞர் பிப். 27ல் தெரிவிக்க வேண்டும் என்று வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications