நீச்சல் பயிற்சி.. வாக்கிங்.. பொங்கலுக்கு சீறிப்பாய ரெடியாகும் ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை: தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அதிலும் குறிப்பாக, மதுரை மற்றும், திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு இன்னும் சிறப்பாகும்.
பொங்கலுக்கு இன்னும் 20 நாட்கள் கூட இல்லை. எனவே, இப்போதிருந்தே, காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சாதாரண உணவுகள் வழங்கப்படுவது இல்லை. சத்தான உணவுகளை கொடுத்து காளைகளை சிறப்பாக, தயார் செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு, காளைகளுக்கு 2 மாதமாக நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டம், மண்ணை கொம்பால் குத்தி கிளறும் பயிற்சி, அருகில் யாரையும் நெருங்க விடாமல் விரட்டும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவுகளை விட பருத்தி, புண்ணாக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான சத்தான உணவுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறது.
அதேநேரம், சில மாவட்டங்களில், ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி முதல் மதியம் 2 மணியுடன் முடிந்து விடுகிறது. திண்டுக்கல்லும் அதில் ஒரு மாவட்டம். இதனால் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் மாடுகள் கலந்து கொள்ள வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.
மற்ற மாவட்டங்கள் மாதிரி, காலை 8 மணி முதல் 5 மணிக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அப்போதுதான், அனைத்து காளைகளும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கிராம மக்கள் பலருக்கும் இணையதள நடைமுறை பற்றி தெரியாது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications