சபரிமலை.. மதுரையிலிருந்து கேரள அரசுக்கு எச்சரிக்கைவிடுத்த கர்நாடக மாஜி துணை முதல்வர்
மதுரை: கேரளா இந்து தர்மங்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என்று கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக ஈஸ்வரப்பா வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. இங்கு இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் பிரச்சனையாக ஆக்குகிறார்கள்.

அரசியல்வாதிகள் பிரச்சனை
உச்சநீதிமன்ற நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் கர்நாடகா மேகதாது அணை திட்டத்தை உருவாக்கி வருகிறது. கர்நாடகா - தமிழ்நாடு இருவரும் சகோதரர்கள், சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகின்றார்கள். இது நல்லதல்ல, கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் தண்ணீர் இல்லை. இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி தண்ணீரை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

காங்கிரஸ் குழப்பம்
கடந்த தேர்தலின் போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அப்போது காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா பேசும் போது பிஜேபிக்கு ஒன்பது அல்லது பத்து இடங்கள் கூட கிடைக்காது என்று கூறினார். நாங்கள் பாராளுமன்ற சீட்டுகளில் 17 பெற்றோம், காங்கிரஸ் தான் 9 சீட்டுகளை பெற்றது. மாநிலம் முழுவதும் காங்கிரஸ் குழப்பம் அடைந்திருக்கிறது.

பாஜகவுக்கு ஆதரவு இருக்கிறது
40 எம்எல்ஏ என்று இருந்த நிலையிலிருந்து மாறி 107 இடங்களில் பிடித்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் வைத்துப்பார்க்கும் போது பாஜகவுக்கு ஆதரவாக கர்நாடக மக்கள் இருக்கிறார்கள். இதே நிலைதான் வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இருக்கும். கடந்த 800 ஆண்டுகளாக சபரிமலைக்கு பெண்கள் யாரும் செல்லவில்லை,

கடவுள் நம்பிக்கை வெற்றி பெறும்
கம்யூனிஸ்டுகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் தான் சபரிமலைக்கு பெண்கள் சென்றுள்ளனர். இன்று அல்லது நாளை கடவுள் நம்பிக்கை வெற்றி பெறும். உச்சநீதிமன்றம் மக்களின் பக்தி நம்பிக்கையில் தலையிடக்கூடாது. கேரளா இந்து தர்மங்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications