நகை அடமானம் வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி.. அமைச்சர் செல்லூர் ராஜு ஹேப்பி நியூஸ்
மதுரை: நகையை வைத்து பயிர்கடன் பெற்றவர்களுக்கும் கடன் தள்ளுபடி உத்தரவு செல்லுபடியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் பெற்ற ரூ.12,110 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றார் முதல்வர்.

அதிரடி அறிவிப்பு
இந்த அறிவிப்பு பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி உள்ளது. சிறு குறு விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். புயல், பருவம் தவறிய மழை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் பெரிய மகிழ்ச்சியடைந்தனர்.

விவசாயிகள் சந்தேகம்
ஆனால் பல்வேறு விவசாயிகளும் தாங்கள் நகைகளை வைத்துப் அடமானமாக வைத்து பெற்ற பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் பட்டியலில் இருக்கிறதா என்று சந்தேகம் எழுந்தது.

தெளிவு இல்லை
இதுபற்றி நேற்று கூட்டுறவு அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவர்களிடம் தெளிவான ஒரு பதில் இல்லை. முதல்வர் உத்தரவில் அது போன்ற அம்சம் இல்லை என்று மட்டும் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

விவசாயிகள் மகிழ்ச்சி
அவர் கூறுகையில், ஆவணங்கள் மட்டுமின்றி நகைகளை வைத்து பயிர் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இதனால் அனைத்து தரப்பு விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications