நீங்க உள்ளே வராதீங்க.. மதுரையில் பிரச்சாரத்திற்கு சென்ற பாஜக வேட்பாளர்.. திருப்பி அனுப்பிய மக்கள்!
மதுரை: மதுரையில் வாக்கு சேகரிக்கச் சென்ற பாஜக வேட்பாளர் மற்றும் கட்சியினரை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள் தமிழ்நாடு முழுக்க தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததால் தமிழ்நாடு முழுக்க வேட்பாளர்களை களமிறக்கி பாஜக தனித்து போட்டியிடுகிறது. இதற்காக பாஜக தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

வித்தியாசமான பிரச்சாரம்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வித்தியாசமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சிலர் முதல்வர் ஸ்டாலின் வேடத்தில் வாக்கு கேட்டு வருகின்றனர். அதேபோல் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் வேடத்திலும், ஜெயலலிதா வேடத்திலும், கருணாநிதி வேடத்திலும் பல இடங்களில் வேட்பாளர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலையும் தோசை சுட்டு, துணிகளை அயர்ன் செய்து சுவாரசிய பிரச்சாரம் செய்து வருகிறார்

மதுரை வேட்பாளர்
இந்த நிலையில்தான், மதுரையில் பாஜக வேட்பாளர் ஒருவர் பர்தா அணிந்து வாக்கு கேட்க சென்றார். மதுரை மாநகராட்சி 54 வது வார்டில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கின்றனர். இந்த வார்டில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மெகருநிஷா போட்டியிடுகிறார். இன்று காஜிமார் பெரிய பள்ளிவாசல் பகுதியில் தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருடன் வாக்கு சேகரிக்க வந்துள்ளார்.

வாக்கு சேகரிக்க சென்றனர்
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென அவர்களை வழிமறித்துள்ளனர். இதையடுத்து பாஜகவை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து மெகருநிஷா மற்றும் அவர்களது ஆதரவாளர்களை உடனடியாக திரும்பிச் செல்லுமாறு சுமார் 20க்கும் மேற்பட்டோர் வேட்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் கொதிப்பாக இருந்த மக்களை சமாதானம் செய்தனர்.

பிரச்சாரம்
பாஜக எங்களுக்கு எந்த விஷயத்திலும் ஆதரவாக இல்லை. வாக்கு மட்டும் கேட்க வருவது நியாயமா என்று அங்கிருந்த மக்கள் பாஜக வேட்பாளர் மெகருநிஷாவிடம் கேட்டனர். இதற்கு அந்த வேட்பாளர்.. நீங்கள் இப்போது இப்படி தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று குறிப்பிட்டார். அதற்கு அங்கு இருந்த இஸ்லாமிய மக்கள்.. இந்தியாவில் பல விஷயம் தேவை இல்லாமல் நடக்கிறது அதை போய் முதலில் கேளுங்கள் என்று கூறி அவரிடம் நீண்ட வாக்கு வாதம் செய்தனர். கடைசியில் போலீசார் அங்கிருந்தவர்களை சமாதானம் செய்து மெகருநிஷாவை பிரச்சாரம் செய்ய வேறு சாலைக்கு அழைத்து சென்றனர்.
-
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications