Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஎம் பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு.. கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளத்தில் இருந்து இஎம்எஸ் நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு அகில பொதுச் செயலாளாரக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளான இன்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்வு நடைபெற்றது.

Madurai CPM MA Baby

இதில், கேரள முன்னாள் அமைச்சர் எம்.ஏ.பேபி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்குப் பிறகு கேரள மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6 ஆவது பொதுச் செயலாளர் ஆவார்.

கடந்த ஆண்டு சீதாராம் யெச்சூரி இறந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதைத்டொர்ந்து, பிரகாஷ் காரத் இடைக்கால ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்வு நடத்தப்பட்டு, எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய மாநாட்டில், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+