மருத்துவ கவுன்சிலிங்கில் தில்லுமுல்லு..கலங்கி நிற்கும் மாணவி! கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் ஃபைன்!
மதுரை: நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கப்படாததோடு, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு 5 லட்சம் ரூபாயை அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்த அருணகிரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " 2017- 18 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தன் மகளுக்கு, கல்லூரி ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கவுன்சிலிங் அறங்களை மீறி முறையற்ற விதத்தில் நடந்ததாகவும் இதில் பாதிக்கப்பட்ட தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோரியும் 2017 ஆம் ஆண்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், "மனுதாரரின் மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். நீட் தேர்வில் 136 மதிப்பெண்களை பெற்று கவுன்சிலிங் கலந்து கொண்டுள்ளார். 46 இடங்களுக்கான பட்டியலில் 43 வது நபராக கலந்து கொண்டு இருந்திருக்கிறார். அரசு கல்லூரிகளில் 3 இடங்கள் இருந்த நிலையில், மருத்துவ கல்வி இயக்குனர் அவற்றை ஓசி பிரிவை சேர்ந்த சுபிஷா, ஸ்ரீமதி, கவிதா ஆகிய மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளார்.
மனுதாரரின் மகளுக்கு அரசு கல்லூரி எனக் குறிப்பிட்டு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டு, அதற்கான கற்பித்தல் தொகையாக 9600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் கல்லூரியில் சேர்ந்த பின்பு அது சுயநிதி கல்லூரி எனக் குறிப்பிட்டு, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கல்வி கட்டணமாகவும் 75 ஆயிரம் ரூபாயை விடுதி கட்டணம் ஆகவும் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனதாரரும் 3 லட்சத்து 50 ஆயிரத்து 370 ரூபாயை செலுத்தியுள்ளார்.
இருப்பினும் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்த இயலாது என்பதால், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்குமாறு மனுதாரர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரிடமும் இது தொடர்பான கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில, பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கான இடம் ஓசி பிரிவை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கப்படாததோடு, செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் எனில் கல்வியை இடைநிறுத்தம் செய்வதாக மனு வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது. மாணவர்களையும் அவரது பெற்றோரையும் தவறான முறையில் வழிநடத்திய இந்த செயல் சட்ட விரோதமானது. ஆனால் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் இதுவரை முறையான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இது மனுதாரரின் மகளின் உரிமைகளை பறிக்கபட்டுள்ளது. மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனருக்கு 5 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. என உத்தரவிட்டு வழக்கு முடித்துவைத்தார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications