Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருத்துவ கவுன்சிலிங்கில் தில்லுமுல்லு..கலங்கி நிற்கும் மாணவி! கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் ஃபைன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கப்படாததோடு, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு 5 லட்சம் ரூபாயை அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்த அருணகிரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், " 2017- 18 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தன் மகளுக்கு, கல்லூரி ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கவுன்சிலிங் அறங்களை மீறி முறையற்ற விதத்தில் நடந்ததாகவும் இதில் பாதிக்கப்பட்ட தனது மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க கோரியும் 2017 ஆம் ஆண்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

high court neet counselling


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், "மனுதாரரின் மகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். நீட் தேர்வில் 136 மதிப்பெண்களை பெற்று கவுன்சிலிங் கலந்து கொண்டுள்ளார். 46 இடங்களுக்கான பட்டியலில் 43 வது நபராக கலந்து கொண்டு இருந்திருக்கிறார். அரசு கல்லூரிகளில் 3 இடங்கள் இருந்த நிலையில், மருத்துவ கல்வி இயக்குனர் அவற்றை ஓசி பிரிவை சேர்ந்த சுபிஷா, ஸ்ரீமதி, கவிதா ஆகிய மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளார்.

மனுதாரரின் மகளுக்கு அரசு கல்லூரி எனக் குறிப்பிட்டு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டு, அதற்கான கற்பித்தல் தொகையாக 9600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனுதாரர் கல்லூரியில் சேர்ந்த பின்பு அது சுயநிதி கல்லூரி எனக் குறிப்பிட்டு, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கல்வி கட்டணமாகவும் 75 ஆயிரம் ரூபாயை விடுதி கட்டணம் ஆகவும் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர். மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மனதாரரும் 3 லட்சத்து 50 ஆயிரத்து 370 ரூபாயை செலுத்தியுள்ளார்.

இருப்பினும் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்த இயலாது என்பதால், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் ஒதுக்குமாறு மனுதாரர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரிடமும் இது தொடர்பான கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில, பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கான இடம் ஓசி பிரிவை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசு கல்லூரியில் இடம் வழங்கப்படாததோடு, செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் எனில் கல்வியை இடைநிறுத்தம் செய்வதாக மனு வழங்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது. மாணவர்களையும் அவரது பெற்றோரையும் தவறான முறையில் வழிநடத்திய இந்த செயல் சட்ட விரோதமானது. ஆனால் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனர் இதுவரை முறையான பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை. இது மனுதாரரின் மகளின் உரிமைகளை பறிக்கபட்டுள்ளது. மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் இயக்குனருக்கு 5 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. என உத்தரவிட்டு வழக்கு முடித்துவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+