மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த தம்பிரான் நியமனம்!
Recommended Video
மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளை இளைய சன்னிதானமாக நேற்று அறிவித்தார்.

மதுரை ஆதீனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு எழவே அவரை நீக்கி சர்ச்சையிலும் சிக்கினார் மதுரை ஆதீனம்.

இந்நிலையில் நேற்று புதிய இளைய ஆதீனத்தை மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாத ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் நியமித்துள்ளார். மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக சிவ தொண்டாற்றியுள்ளார்.

நேற்று அதீன மடத்தின் சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.













Click it and Unblock the Notifications