பொதுமக்கள் சினிமாவுக்கு செல்வதை தவிர்க்கணும்! கோயில் சொத்துக்கு ஆசைப்படக் கூடாது! -மதுரை ஆதினம்
மதுரை: பொதுமக்கள் சினிமாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோயில்களுக்கும், மடங்களுக்கும் அதிகம் சென்று வர வேண்டும் எனவும் மதுரை ஆதினம் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சினிமாவில் 3 மணி நேரம் செலவிடுவதால் என்ன பயன் என்றும் கோயில்களுக்கும், மடங்களுக்கும் மக்கள் சென்றால் தான் மன நிம்மதி கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் கோயில் சொத்துக்களுக்கு யாரும் ஆசைப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கோயிலும், மடமும் தான் பவர் கிடைக்கும் இடங்கள் என்றும் இது இன்னும் பலருக்கு தெரியவில்லை எனவும் ஒரு விளக்கம் அளித்தார் மதுரை ஆதினம். மன ஆறுதல் கொடுக்கக் கூடிய இரண்டே இடங்கள் கோயிலும், மடமும் தான் என தெரிவித்துள்ளார்.
மனிதர்களை பக்குவப்படுத்தும் பவர் ஸ்டேஷன்களாக கோயிலும், மடமும் திகழ்கிறது என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். இவரை பொறுத்தவரை ஆன்மிகப் பணிகளோடு சேர்ந்து அரசியலும் பேசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதினம் தனிப்பட்ட முறையில் ஒரு செங்கோலை பிரதமர் மோடிக்கு பரிசளித்திருந்தார்.
ஆன்மிகம், அரசியல் மட்டுமே பேசி வந்த மதுரை ஆதினம் முதல்முறையாக சினிமாவை பற்றியும் பேசியிருக்கிறார். அதுவும் பொதுமக்கள் சினிமாவுக்கு செல்ல வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார்.
மடத்திற்கு வருபவர்கள் ஆசிபெற்று செல்ல வேண்டுமே தவிர இவரிடம் என்ன இருக்கிறது, ஆதினத்துக்கு என்ன சொத்து இருக்கிறது என்ற சிந்தனையை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் மற்ற ஆதினங்களை விட மதுரை ஆதினம் மடம் மிகவும் பழமையானது என்பதும் ஏராளமான சொத்துக்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications