பழக்க தோஷத்தில் வணக்கம் போட்ட ராஜ் சத்யன்.. மதுரையில் மீண்டும் பஞ்சாயத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில் வேட்பாளர் ராஜ்சத்யன் பங்கேற்றார்.
மதுரை: ராஜ்சத்யனுக்கு எங்க போனாலும் வணக்கம் வெக்கறதே வேலை போல இருக்கு.. பழக்கதோஷத்தில் வணக்கம் வைக்க போய்.. திரும்பவும் ஒரு சர்ச்சையில் சிக்க உள்ளார்!
மதுரையில் இன்று மீனாட்சி கோயிலில் விசேஷம்! மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இநத் கல்யாணத்தை காண ஆயிரக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.

அப்போது, விழாவில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனும் வந்திருந்தார். அவருடன் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட ஏராளமான அதிமுகவினரும் கோயிலுக்கு வந்தனர். அப்போது ராஜ்சத்யன் அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்து கும்பிட்டு கொண்டே சென்றார்.
இதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது. பிரச்சாரம் முடிந்து எந்த வேட்பாளரும் பொதுமக்களை பார்த்து கும்பிட்டு செல்ல கூடாது. இதுவும் விதிமீறல்தான். ஒருவேளை யதேச்சையாக வணக்கம் வைத்திருந்தால், மதம் சார்ந்த நிகழ்வுகளில் இப்படி செய்யக்கூடாது என்கிறது தேர்தல் விதி!
இதை ராஜ்சத்யன் வேண்டுமென்றே செய்திருக்க முடியாது. யதேச்சையாக தன்னையும் அறியாமல்தான் பொதுமக்களை பார்த்ததும் கை தானாகவே வணக்கம் வைக்க போய்விட்டது.
இப்படித்தான் போன வாரம் மதுரையில் தபால் வாக்குபதிவு நடக்கும்போது காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரர்களிடமே ராஜ் சத்யன் வணக்கம் வைத்து வாக்கு கேட்டார். இது சம்பந்தமான புகாரும் கலெக்டருக்கு சென்று சர்ச்சையானது. இப்போது அடுத்த சர்ச்சையும் எழுந்துள்ளது!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications