Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு கிப்ட் + சிவப்பு நிற கார்.. கிறங்கும் கீழக்கரை.. திமில் பிடித்து திமிர் காட்டும் மதுரை வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இந்த மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மதுரை வந்தார்.. காலை 10.,30 மணிக்கு ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.

Madurai Alanganallur Jallikattu and prize of rs 1lakh along with a Red car will be given to the best bull and cowherds
பிரம்மாண்டம்: ஜல்லிக்கட்டு போட்டியை 5 ஆயிரம் பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில், பிரத்யேகமான ஜல்லிக்கட்டு விளையாட்டுத்திடலை கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ரூ.44 கோடி செலவில், 66 ஏக்கரில், கட்டப்பட்டுள்ள இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை, முதல்வர் திறந்து வைக்கிறார்.

"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தை, முதல்வர் திறந்து வைத்ததுமே, ஜல்லிக்கட்டு போட்டிகள் புதிய மைதானத்தில் நடைபெற போகின்றன..

முன்பதிவுகள்: இந்த ஜல்லிக்கட்டி போட்டியானது, அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளன.. இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன. இதற்கெனவே 2 நாட்களும் முன்பதிவுகள் நடந்தன.. மொத்தமாக 9,312 ஜல்லிக்கட்டு காளைகளும், 3669 மாடுபிடி வீரர்களும் இப்போட்டிக்காக முன்பதிவு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆன்லைன் வாயிலாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதில், முதற்கட்டமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 300 மாடு பிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை முதல்முறையாக இந்த மைதானத்தில், முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். அத்துடன், போட்டிகளையும் கண்டுகளிக்க உள்ளார்.

கார் பரிசு: இந்தப் போட்டி தமிழக அரசு சார்பில் நடக்கும் நிலையில், வெற்றிபெறும் வீரர் மற்றும் காளைகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடிக்கும் காளைக்கு, கார் பரிசுடன் ஒரு லட்ச ரூபாய், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு காருடன் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. ரொக்கப் பரிசுகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. கார்களை முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் வழங்க உள்ளனர்.

2வது இடம் பிடிக்கும் காளைக்கு ரூ.75 ஆயிரம், 3வது இடம் பிடிக்கும் காளைக்கு ரூ.50 ஆயிரம் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இரண்டாமிடம் பிடிக்கும் வீரருக்கு ரூ. 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாமிடம் வீரருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் அரசு தரப்பில் வழங்கப்படும்.. இந்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இது தவிர ஒவ்வொரு முறையும், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகளை அடக்கும் வீரருக்கு, அடங்கா காளைக்கும் மற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை போல் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இணைய வசதி: "கலைஞர் ஏறுதழுவல் ஏறுதழுவுதல்" அரங்கத்தில் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டினர் கண்டு ரசித்திட சுற்றுலாத்துறை சார்பில் தேவையான முன்னேற்பாடு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.. போட்டியை காண ஆர்வமுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்களது பெயர்களை [email protected] என்ற வெப்சைட்டில் முன்பதிவு செய்யலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
போட்டியில் வெற்றி பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக தலா ஒரு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. இந்த மஹிந்திரா தார் ஜல்லிக்கட்டு அரங்கில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சிவப்பு நிற கார் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+