Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை துள்ளுது.. பார்க்கறதுக்கு "ஸ்டேடியம்" மாதிரியே.. ஈர்க்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை, நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.. இதற்கான ஏற்பாடுகளில் அமைச்சர்களும், அதிகாரிகளும் மும்முரமாகி உள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பெயர்பெற்றது மதுரை மாவட்டம். அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றால், உலகபிரசித்தி பெற்றது.

Madurai Alankanallur Jallikattu ground ready and Do you know what are the Specialities in alanganallur jallikattu stadium

காலரிகள்: இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருவதை பார்ப்பதற்கென்றே ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வருடா வருடம் கூடுவது வழக்கமாகும்.

ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கென்று தனியாக இடம் எதுவும் இல்லை.. எப்போதுமே ஊருக்குள்ளேயே இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதனால், வாடிவாசல் அருகேயுள்ள காலரிகளில் அமர்ந்து, விஐபிக்கள் நிகழ்ச்சியை கண்டுகளிப்பார்கள்.. ஆனால், பொதுமக்கள், வெளிநாட்டினருக்கு போட்டிகளை காண்பது எளிதாக இருப்பதில்லை.

ஜல்லிக்கட்டு: இந்த பிரச்சனைக்குதான், ஒரு முடிவு கட்ட நினைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. ஜல்லிக்கட்டை எல்லாருமே ஒன்றுசேர்ந்து கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காகவே, பிரத்யேகமான ஜல்லிக்கட்டு விளையாட்டுத்திடல் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அதிரடியாக அறிவித்தார்.. இதையடுத்து, கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில், ரூ.44 கோடி மதிப்பில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு கட்டப்பட்டுள்ளது..

இந்த மைதானத்தில் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உட்கார்ந்து போட்டிகளை பார்க்கலாம். நிறைய வசதிகள் கொண்டு இந்த மைதானம் கட்டப்பட்டிருக்கிறது.. பார்ப்பதற்கு, அப்படியே கிரிக்கெட் ஸ்டேடியம் போலவே இருக்கிறது..
பெயர் சூட்டல்: இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், இந்த அரங்கத்தை நாளை 24ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்..

வாடிவாசல்: முக்கியமாக, ஜல்லிக்கட்டு வாடிவாசல் பகுதிகள், பார்வையாளர் மாடம், காளைகள் சென்று சேரும் இடம், பொதுமக்கள் அமரும் இடம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.. நாளையே இந்த மைதானம் திறக்கப்போவதால், மதுரை மக்கள் பெரும குஷியில் காணப்படுகின்றனர்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+