'தொடர்ந்து 25 முறை'.. அமமுக பிரமுகரை கொதிக்கும் வெந்நீரை ஊற்றி, கல்லை போட்டு பயங்கரமாக கொன்ற மனைவி
மதுரை: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால், அ.ம.மு.க. பிரமுகரை கொதிக்கும் வெந்நீரை ஊற்றியதுடன், கல்லையும் தூக்கிப்போட்டுவிட்டு, அரிவாளால் பல முறை வெட்டி கொடூரமாக கொலை செய்திருக்கிறார் அவரது மனைவி.இந்த பயங்கர சம்பவம் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கிராமம் தனக்கன்குளம். இங்குள்ள திருவள்ளுவர்நகரை சேர்ந்த 51 வயதாகும் சர்க்கரை என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
சர்க்கரைக்கு அன்னலட்சுமி (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அ.ம.மு.க.வில் திருப்பரங்குன்றம் 1-வது பகுதி செயலாளராக செயல்பட்டு வந்தார்.

வலியால் அலறினார்
இந்தநிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. சனிக்கிழமை இரவில் வீட்டுக்கு வெளியே கட்டிலில் சர்க்கரை தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அன்னலட்சுமி ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரை எடுத்து வந்து சர்க்கரை மீது ஊற்றினாராம். இதனால் வலியால் அவர் அலறி துடித்து அலறியிருக்கிறார்.

படுகாயம்
அந்த நேரத்தில் சர்க்கரை எழுந்து ஓடிவிடாமல் இருக்க அங்கிருந்த பெரிய கல்லை தூக்கி வந்து சர்க்கரையின் தலையில் அன்னலட்சுமி போட்டுள்ளார். இதில் நிலைகுலைந்து கிடந்த அவரை அன்னலட்சுமி அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சர்க்கரை, கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அன்னலட்சுமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மதுரை போலீஸ்
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்கள். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சர்க்கரையின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய அன்னலட்சுமி
அமமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய அன்னலட்சுமியை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கைப்பற்றியும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல்
நடந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் கேட்ட போது, அமமுக பிரமுகர் சர்க்கரைக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகிறார்கள். கள்ளக்காதலை கைவிடும்படி அன்னலட்சுமி வற்புறுத்தி வந்ததால், கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில்தான் கணவரை அவர் கொடூரமாக கொன்று இருக்கலாம் என்று தெரிகிறது. கணவரை அவர் அரிவாளால் வெட்டும் காட்சியும், தப்பி ஓடும் காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தப்பி ஓடிய அன்னலட்சுமியை கைது செய்த பின்புதான் கொலைக்கான முழு பின்னணி தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
-
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications