மதுரை சித்திரை திருவிழா.. இரவிலும் சிறப்பு பேருந்துகள்.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்- ஆட்சியர்
Recommended Video
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 20 மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இரவிலும் அனைத்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 20 மருத்துவக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

மேலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் இருந்து, இன்று திறக்கப்படும் 216 மில்லியன் கியூபிக் தண்ணீர் 6 மணி நேரத்திற்கு முன்பாகவே கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு வந்து சேரும்.
திருவிழாவில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் விழாவினை கண்டுகளிக்கும் வகையில் 20 இடங்களில் எல் இ டி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 33 இடங்களில் 66 மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர்தல் பணியும், திருவிழா பணியும், சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால், மதுரை வைகை ஆற்றில் கட்டப்படும் தடுப்பணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

திருத்தேர் சுற்றிவரும் பகுதிகளில் 9 இடங்கள் மின்சாரம் தடை ஏற்படுத்தும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வாக்குப்பதிவு தடைப்படாத வண்ணம் மாநகராட்சி மற்றும் மின்சார வாரியம் உதவியுடன் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர் சுற்றி வரும் பகுதிகளில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு, வாக்குப் பதிவிற்காக பேரி காட் அமைக்கப்பட்டுள்ளது. தேர் சுற்றிவரும் போது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், கிரேன் உதவியுடன் திருத்தேர் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
18ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்காகவும், 19ஆம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழாவிற்காகவும், பேருந்து இயங்க போக்குவரத்து துறையுடன் பேசி, இரவிலும் அனைத்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் நடராஜன் அப்போது தெரிவித்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications