குழந்தை பெற வேண்டும்.. கணவருக்கு 21 நாள் பரோல் கேட்ட பெண்.. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: 3 பேரை கொன்றுவிட்டு ஒருவர் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தனது கணவர் மூலம் குழந்தை பெற விரும்புவதாகவும், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்காக 21 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கேகே ராமகிருஷ்ணன் அமர்வு அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மத்திய சிறையில் இருப்பவர் முத்துமணி. இவர் 3 பேரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில் முத்துமணி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Madurai High Cour Judge

இந்நிலையில் தான் முத்துமணியின் மனைவி குழந்தை பெற்று கொள்ள விரும்பினார். கணவர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பதால் குழந்தை பெற்று கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் தனது கணவர் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்று கொள்ள விரும்புகிறேன். இதனால் தனது கணவருக்கு 21 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று முத்துமணி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் நீதிபதி கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

அரசு தரப்பில் ஆயுள் கைதிக்கு பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆயுள் கைதிக்கு பரோல் வழங்கினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து நீதிமன்றம் முத்துமணியின் மனைவி தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும் அதற்கான காரணத்தையும் நீதிமன்றம் தெரிவித்தது. மூன்று பேரை கொன்ற குற்றத்திற்காக ஆள் தண்டனை அனுபவித்து வுரும் ஒருவருக்கு குழந்தை பிறந்து வளரும்போது அது சமூகத்தில் பிரச்சனையை எதிர்கெள்ளும் ஆயுள் தண்டனை பெற்ற நபரின் குழந்தை என்ற பெயரை பெறும்.

சிறை விதிகளின்படி (Tamil Nadu Suspension of Sentence Rules, 1982) பரோல் என்பது கைதிக்கான சலுகை தானே தவிர உரிமை இல்லை. அதிலும் கருத்தரிப்பு சிகிச்சைக்காக விடுப்பு வழங்க அந்த விதிகளில் இடமில்லை.
சிறைச்சாலையில் கைதிகளைச் சீர்திருத்துவதுதான் முக்கிய நோக்கமே தவிர, அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகை செய்வது இல்லை.

மேலும் குழந்தை பெற விரும்பும் தாயின் விருப்பத்தை மட்டுமே இங்கு கருத்தில் கொள்ள முடியாது. பிறக்கப்போகும் குழந்தையின் நலன் மற்றும் அது எதிர்கொள்ளவிருக்கும் சமூகச் சிக்கல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+