Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஸி போல்.. இனி இந்திய குழந்தைகளுக்கும் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை? மதுரை ஹைகோர்ட் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆஸ்திரேலியாவில் கடந்த 10ம் தேதி முதல் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். சட்டம் வரும் வரை குழந்தைகளுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மதுரை உயர்நீதிமன்ற கிளை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இதனால் இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோர் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா பரவலின்போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் சிறுவர், சிறுமிகள் அனைவரும் ஸ்மார்ட்போன்கள், ஐபோன்களை பயன்படுத்த தொடங்கினர். இதனை தற்போது வாடிக்கையாக மாற்றிவிட்டனர்.

social media high court union government

சிறுவர், சிறுமிகள் பலரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்பட பல சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகி்ன்றனர். இந்நிலையில் தான் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எஸ் விஜயகுமார் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், ‛‛சமூக ஊடகங்களில் குழந்தைகளுக்கு ஆபாசமான வீடியோக்கள் எளிதில் கிடைக்கின்றன. இது பெரும் பிரச்சனையாக உள்ளது.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி ஆபாச வீடியோக்களை தடுக்கும் விதமான 'சாப்ட்வேர்' பயன்படுத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். தேசிய மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்களின் உறுப்பினர் செயலர்கள், இன்டர்நெட் சர்வீசஸ் புரோவைடர் சங்கத்தின் செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை தடுக்க வழிகள் உள்ளன. இருப்பினும் ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க வழிவகை செய்ய சாப்ட்வேர் அவசியம் தேவைப்படுகிறது. இதுபோன்ற அருவருப்பான காட்சிகளை பார்ப்பதும், தவிர்ப்பதும் அவரவர் விருப்பம் மற்றும் உரிமை சார்ந்ததாக இருந்தாலும் கூட குழந்தைகள் பார்ப்பது என்பது ஆபத்து.

இதனால் ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளங்களை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோன்ற தடையை மத்திய அரசும் கொண்டு வரவேண்டும். ஆஸ்திரேலியாவை நடைமுறையில் உள்ளது போல் ஒரு சட்டத்தை இங்கும் இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும். இந்த விஷயத்தில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி, அதை முழு மனதுடன் செயல்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதுவரை இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தனர். இதனால் நம் நாட்டிலும் ஆஸ்திரேலியாவை போல் சமூக வலைதளங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 10ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடு என்ற பெயரை ஆஸ்திரேலியா பெற்றது. இந்த தடை உத்தரவுக்கு ஆஸ்திரேலியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் ஆஸ்திரேலியாவை பின்பற்றி இந்தியாவிலும் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+