சாதி.. மாணவியிடம் இழிவு பேச்சு.. வன்கொடுமை சட்டத்தில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் கைது.. அதிரடி
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியை தரக்குறைவாகவும், சாதி ரீதியாகவும் இழிவுப்படுத்தி பேசிய புகாரில் வரலாற்று துறை பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சாதி ரீதியிலான பிரச்சனைகளை தடுக்கவும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட ஆங்காங்கே சாதியை மையப்படுத்தி தீண்டாமை பிரச்சனைகள் நடக்கின்றன.
இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட பிரச்சனை மட்டும் இன்னும் முற்றுப்பெறவில்லை. மேலும் அவ்வப்போது கல்வி நிறுவனங்களிலும் சாதி ரீதியான பிரச்சனைகள் எழுகின்றன. இந்நிலையில் தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

சாதி சார்ந்து தரக்குறைவாக...
மதுரை பல்கலை நகரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்று துறை பேராசிரியராக இரப்பவர் சண்முக ராஜா. இவர் எம்ஏ பயிலும் மாணவி பாரதியை ஒருமையிலும், சாதி சார்ந்து தரம்குறைந்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

பேராசிரியர் கைது
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது போராசிரியர் சண்முக ராஜா மீதான புகார் உண்மை தன்மை கொண்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சண்முகராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மாணவிகளிடம் தவறாக..
முன்னதாக போராசிரியர் சண்முகராஜா சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதற்கு முன்பு பல்கலைக்கழக மாணவிகளிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியதும் தெரியவந்துள்ளது.

அதிர்ச்சி
இந்நிலையில் தான் தற்போது சண்முகராஜா சாதி ரீதியாக மாணவியை துன்புறுத்தி பேசிய புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications