Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதி.. மாணவியிடம் இழிவு பேச்சு.. வன்கொடுமை சட்டத்தில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் கைது.. அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியை தரக்குறைவாகவும், சாதி ரீதியாகவும் இழிவுப்படுத்தி பேசிய புகாரில் வரலாற்று துறை பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சாதி ரீதியிலான பிரச்சனைகளை தடுக்கவும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட ஆங்காங்கே சாதியை மையப்படுத்தி தீண்டாமை பிரச்சனைகள் நடக்கின்றன.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட பிரச்சனை மட்டும் இன்னும் முற்றுப்பெறவில்லை. மேலும் அவ்வப்போது கல்வி நிறுவனங்களிலும் சாதி ரீதியான பிரச்சனைகள் எழுகின்றன. இந்நிலையில் தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

 சாதி சார்ந்து தரக்குறைவாக...

சாதி சார்ந்து தரக்குறைவாக...

மதுரை பல்கலை நகரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்று துறை பேராசிரியராக இரப்பவர் சண்முக ராஜா. இவர் எம்ஏ பயிலும் மாணவி பாரதியை ஒருமையிலும், சாதி சார்ந்து தரம்குறைந்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 பேராசிரியர் கைது

பேராசிரியர் கைது

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது போராசிரியர் சண்முக ராஜா மீதான புகார் உண்மை தன்மை கொண்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சண்முகராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 மாணவிகளிடம் தவறாக..

மாணவிகளிடம் தவறாக..

முன்னதாக போராசிரியர் சண்முகராஜா சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதற்கு முன்பு பல்கலைக்கழக மாணவிகளிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியதும் தெரியவந்துள்ளது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்நிலையில் தான் தற்போது சண்முகராஜா சாதி ரீதியாக மாணவியை துன்புறுத்தி பேசிய புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+