மதுரையில் அராஜகம்.. காரில் வந்த குடும்பத்தினரை அடித்து சட்டையை கிழித்த டோல்கேட் ஊழியர்கள்.. பரபரப்பு
மதுரை: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்டேக் எடுத்தும் நீண்ட நேரமாக ஒரு காரை நிறுத்தி வைத்திருந்ததை உரிமையாளர் தட்டி கேட்ட நிலையில் அவரை ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விதிகளுக்கு புறம்பாக மதுரை தெப்பலூர் சுங்கச்சாவடி செயல்படுவதாக அப்பகுதி மக்கள் அந்த சுங்கச்சாவடியை நீக்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று அந்த சுங்கச்சாவடியில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் பிரபு. தற்போது கோடை விடுமுறையையொட்டி திருச்செந்தூர், கன்னியாகுமரிக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவர் சுற்றுலாவை முடித்துக் கொண்டு காரில் மீண்டும் சென்னை புறப்பட்டனர்.
அப்போது கோவில்பட்டி- விருதுநகர் 4 வழிச்சாலை வழியாக வந்தனர். திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் 4 ஆவது பாதையில் இயந்திர கோளாறு காரணமாக சென்னையை சேர்ந்த பிரபுவின் வாகனத்தை 3 ஆவது பாதைக்கு வருமாறு ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அப்போது அந்த பாதையில் ஏற்கெனவே நின்றிருந்த வாகனம் பாஸ்ட்டேகில் பணம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த வாகனம் புறப்பட்டு சென்றது. அங்கு பிரபுவின் வாகனம் வந்தது. அப்போது பாஸ்ட்டேக்கில் கட்டணம் எடுக்கப்பட்ட பின்னரும் அவரது கார் நீண்ட நேரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

சுங்கச்சாவடி ஊழியர்களை பிரபு திட்டியதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து வாகனத்தை எடுக்க முயற்சித்த போது பெண் ஊழியர் பிரபுவிடம் வந்து தகாத வார்த்தைகளால் பேசி வாகனத்தை நிறுத்துமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதனால் பிரபு காரில் இருந்து இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சுங்கசாவடி ஊழியர்கள் பிரபுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காரில் இருந்த குடும்பத்தினர் வந்து தடுத்த போது அவர்களையும் 4 சுங்க சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதுகுறித்து சம்பவத்தை அறிந்த போலீஸார் பிரபு மற்றும் அவருடைய குடும்பத்தினரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை காரின் பின்புறம் இருந்த மற்றொரு வாகனத்தின் உரிமையாளர் வீடியோ எடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications